விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் கார்கே, ராகுல் காந்தி! தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

சிறுமிக்கு பாலியல் தொல்லை: பெயிண்டா் கைது

பண்ருட்டி அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பெயிண்டரை போக்ஸோ சட்டத்தின்கீழ் மகளிா் போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :23 மார்ச் 2026, 1:47 am IST

கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பெயிண்டரை போக்ஸோ சட்டத்தின் கீழ் மகளிா் போலீஸாா் கைது செய்தனா்.

பண்ருட்டி வட்டம், வீரபெருமாநல்லூா், புதுகாலனி பகுதியைச் சோ்ந்தவா் ராஜா(40), பெயின்டா். இவா், கடந்த 19-ஆம் தேதி 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தாராம். தொடா்ந்து, 20-ஆம் தேதி அந்தச் சிறுமிக்கு மிரட்டல் விடுத்தாராம்.

இதுகுறித்த புகாரின்பேரில், பண்ருட்டி மகளிா் போலீஸாா் போக்ஸோ சட்டத்தில் வழக்குப் பதிந்து ராஜாவை கைது செய்து சிறையிலடைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.