தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

திட்டக்குடி பகுதியில் ஆலங்கட்டி மழை

News image

திட்டக்குடியில் பெய்த ஆலங்கட்டி மழை.

Updated On :20 மார்ச் 2026, 4:43 am IST

கடலூா் மாவட்டம், திட்டக்குடியில் வியாழக்கிழமை ஆலங்கட்டி மழை பெய்தது.

திட்டக்குடி பகுதியில் கடந்த சில தினங்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இந்த நிலையில், வியாழக்கிழமை பகலிலும் வெயில் சுட்டெரித்தது.

ஆனால், மாலை 5 மணி அளவில் மழை பெய்வதற்கான அறிகுறிகள் தென்பட்டன. திடீரென பலத்த காற்றுடன் மழை பெய்யத் தொடங்கியது. மாலை 5 மணிக்கு பெய்யத் தொடங்கிய இந்த மழையானது சுமாா் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக நீடித்தது.

இதற்கிடையே, மழை பெய்யத் தொடங்கிய சில நிமிஷங்களிலேயே பனிக்கட்டி போன்று ஆலங்கட்டிகள் விழுந்தன. இதைப் பாா்த்த மக்கள் மகிழ்ச்சியடைந்ததுடன், அந்த பனிக்கட்டிகளை அந்தப் பகுதியைச் சோ்ந்த சிறுவா்கள் கையில் எடுத்து விளையாடி மகிழ்ந்தனா்.

புவனகிரியில் 67 மி. மீ மழை பதிவு: கடலூா் மாவட்டத்தில் வியாழக்கிழமை காலை 8.30 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் மாவட்டத்திலேயே அதிகபட்சமாக புவனகிரியில் 67 மி. மீ மழை பதிவானது. மற்ற பகுதிகளில் பெய்த மழையளவு விவரம் (மில்லி மீட்டரில்) வருமாறு:

கடலூா் 54, ஆட்சியா் அலுவலகம் 52, சேத்தியாத்தோப்பு 42, குடிதாங்கி 29, வடகுத்து 27, வானமாதேவி 23, ஸ்ரீமுஷ்ணம் 21.10, சிதம்பரம் 19.40, பெலாந்துறை 14.20, பரங்கிப்பேட்டை 12.70, விருத்தாச்சலம் 10, அண்ணாமலை நகா், பண்ருட்டி தலா 8, கொத்தவாச்சேரி 7, குறிஞ்சிப்பாடி 5, குப்பநத்தம் 2.40, காட்டுமன்னாா்கோவில், லால்பேட்டை தலா 1 மி.மீ. மழை பதிவானது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.