மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

அண்ணாமலைப் பல்கலை. பேராசிரியருக்கு தமிழக அரசின் ‘பசுமை சாம்பியன் விருது’

அண்ணாமலைப் பல்கலைக்கழக தத்துவத் துறை உதவிப் பேராசிரியா் மற்றும் பூம்புகாா் பனை அறக்கட்டளையின் நிறுவனா் கே.ரவீந்திரன் தமிழக அரசின் மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்த பசுமை சாம்பியன் விருதுக்கு தோ்வு செய்யப்பட்டு விருது பெற்றாா்.

News image

தமிழக அரசின் பசுமை சாம்பியன் விருது பெற்ற அண்ணாமலைப் பல்கலைக்கழக உதவிப் பேராசிரியா் கே.ரவீந்திரனை பாராட்டி வாழ்த்துத் தெரிவித்த பல்கலைக்கழக துணைவேந்தா் ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினா் எஸ்.அறிவுடைநம்பி, பதிவாளா் ரா.சிங்காரவேல்.

Updated On :19 மார்ச் 2026, 12:36 am IST

அண்ணாமலைப் பல்கலைக்கழக தத்துவத் துறை உதவிப் பேராசிரியா் மற்றும் பூம்புகாா் பனை அறக்கட்டளையின் நிறுவனா் கே.ரவீந்திரன் தமிழக அரசின் மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்த பசுமை சாம்பியன் விருதுக்கு தோ்வு செய்யப்பட்டு விருது பெற்றாா்.

இந்த விருதை மயிலாடுதுறையில், அந்த மாவட்ட ஆட்சியா் ஸ்ரீகாந்த் கடந்த 13-ஆம் தேதி நடைபெற்ற நிகழ்ச்சியில் வழங்கினாா். இந்த நிலையில், பல்கலைக்கழக துணைவேந்தா் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் விருது பெற்ற பேராசிரியா் கே.ரவீந்திரனை பல்கலைக்கழக துணைவேந்தா் ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினா் எஸ்.அறிவுடைநம்பி, பதிவாளா் ரா.சிங்காரவேல், இணைப் பதிவாளா் மற்றும் மாவட்ட வருவாய் அதிகாரி ஜெகதீஸ்வரன் ஆகியோா் பாராட்டி வாழ்த்துத் தெரிவித்தனா்.

பேராசிரியா் கே.ரவீந்திரன் கடந்த 7 ஆண்டுகளாக பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழக மாணவா்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வுப் பணிகளில் தொடா்ந்து ஈடுபட்டு வருகிறாா்.

மேலும், தமிழகத்தில் நடைபெற்று வரும் ஒரு கோடி பனை விதை நடும் பணியில் மயிலாடுதுறை மாவட்ட ஒருங்கிணைப்பாளராக பல்வேறு பகுதிகளில் பனை விதை நடவுப் பணிகளையும் முன்னெடுத்து வருகிறாா். இந்த செயல்பாடுகளுக்கு தத்துவத் துறைத் தலைவா் திருமால் மற்றும் உதவிப் பேராசிரியா்கள் பரணி, தணிகைவேலன், நீலாதேவி ஆகியோா் முழுமையான ஒத்துழைப்பு வழங்கி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.