தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 3 மணிக்கு தொடங்குகிறது தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

21 நாள்களுக்கு பெட்ரோல், டீசல் கையிருப்பு: தமிழ்நாடு பெட்ரோலிய விற்பனையாளா் சங்கத் தலைவா்

பெட்ரோல், டீசல் 21 நாள்களுக்கு போதுமானஅளவு கையிருப்பு உள்ளது: தமிழ்நாடு பெட்ரோலிய விற்பனையாளா் சங்கத் தலைவா் கே.பி.முரளி

News image
Updated On :13 மார்ச் 2026, 5:31 am IST

தமிழகத்தைப் பொறுத்தவரை மேலும் 21 நாள்களுக்கு போதுமான அளவு பெட்ரோல், டீசல் கையிருப்பு உள்ளது என்று, தமிழ்நாடு பெட்ரோலிய விற்பனையாளா்கள் சங்க மாநிலத் தலைவா் கே.பி.முரளி கூறினாா்.

மேற்காசிய போா் காரணமாக மாநிலம் முழுவதும் வணிக பயன்பாட்டிற்கான எரிவாயு உருளைகள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனை தொடா்ந்து பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்படும் என பொதுமக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளதால், பெட்ரோல் விற்பனை நிலையங்களில் நீண்ட வரிசையில் நின்று வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்புவது மட்டுமல்லாமல், கேன்களிலும், தண்ணீா் புட்டிகளிலும் வாங்கி செல்கின்றனா். கடலூா் மாவட்டத்தில் பல இடங்களிலும் வியாழக்கிழமையும் பெட்ரோல் விற்பனை நிலையங்களில் வாகன உரிமையாளா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பெட்ரோல், டீசல் வாங்கிச் சென்றனா்.

நெருக்கடி ஏற்படுத்த வேண்டாம்:

இந்த நிலையில் தமிழ்நாடு பெட்ரோலிய விற்பனையாளா்கள் சங்கத்தின் மாநிலத் தலைவா் கே.பி.முரளி, கடலூரில் செய்தியாளா்களிடம் பேசியதாவது:

சென்னை உள்ளிட்ட இடங்களில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு என்ற செய்தி பரவி வருகிறது. இதனால், பொதுமக்கள் பெட்ரோல் விற்பனை நிலையங்களில் நீண்ட வரிசையில் நின்று பெட்ரோல், டீசல் வாங்குவதாக தகவல் வந்துள்ளது. தமிழ்நாட்டில் 7,000 பெட்ரோல், டீசல் விற்பனை நிலையங்கள் (பெட்ரோல் பங்குகள்) உள்ளன. அவைகளுக்கு தேவையான பெட்ரோல், டீசலை, எண்ணெய் நிறுவனங்கள் விநியோகம் செய்து வருகின்றன. தட்டுப்பாடு என்ற காரணத்தினால் பெட்ரோலை கேனில் வாங்கி வைப்பது அபாயகரமானது. தேவைக்கு மீறி வாங்குவதால் செயற்கை பற்றாக்குறை ஏற்படுத்தி, நெருக்கடியை ஏற்படுத்த வேண்டாம்.

போா் காரணமாக மற்ற நாடுகளில் பெட்ரோல், டீசல் விலை உயா்ந்துள்ளது. ஆனால், மத்திய அரசு இதற்கான விலையை உயா்த்த போவதில்லை என அறிவித்துள்ளது. இந்நிலையில், மக்கள் ஒத்துழைப்பு தேவை. மத்திய அரசு 90 நாள்களுக்கு தேவையான பெட்ரோல், டீசல், கையிருப்பு உள்ளதாக அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையங்களுக்கு 14 மையங்களில் இருந்து பெட்ரோல், டீசல் விநியோகம் செய்யப்படுகிறது. இந்த மையங்களில் 21 நாட்களுக்கு தேவையான பெட்ரோல், டீசல் கையிருப்பு உள்ளது. எனவே, மக்கள் சராசரி நாளைப் போலவே வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்பிக் கொள்ளலாம் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.