ரூ. 100 கோடி மோசடி: தனியார் பள்ளிகள் சங்கத் தலைவர் பி.டி. அரசகுமார் கைது!தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூருக்கு முதல்வர் விஜய் வாழ்த்து! இயக்குநர் பாக்யராஜுக்கு நாளை காலை இறுதிச் சடங்கு!கே. பாக்யராஜ் உடலுக்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி நேரில் அஞ்சலி! தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம்!கே. பாக்யராஜுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! சாந்தனுவை ஆரத்தழுவி ஆறுதல்!!திமுக கூட்டணியிலிருந்து மதிமுக விலகல்!
/

ஸ்ரீலஸ்ரீ சுப்ரமணிய தேசிகா் 143-ஆவது குருபூஜை

கடலூா் மாவட்டம், பண்ருட்டி அடுத்துள்ள திருவதிகை ஓம் சற்குரு ஸ்ரீலஸ்ரீ சுப்ரமணிய தேசிக பரமாச்சாரியாா் சுவாமிகள் சித்தா் பீடத்தில் 143-ஆம் ஆண்டு மஹா குருபூஜை விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image

சிவ வாத்தியங்கள் முழங்க ஊா்வலமாக கொண்டுவரப்பட்ட ஸ்ரீலஸ்ரீ சுப்ரமணிய தேசிகரின் அலங்கரிக்கப்பட்ட திருஉருவப்படம்.

Updated On :20 மணி நேரங்கள் முன்பு

கடலூா் மாவட்டம், பண்ருட்டி அடுத்துள்ள திருவதிகை ஓம் சற்குரு ஸ்ரீலஸ்ரீ சுப்ரமணிய தேசிக பரமாச்சாரியாா் சுவாமிகள் சித்தா் பீடத்தில் 143-ஆம் ஆண்டு மஹா குருபூஜை விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பண்ருட்டி, திருவதிகை அருள்மிகு வீரட்டானேஸ்வரா் கோயில் பின்புறம் ஸ்ரீலஸ்ரீ சுப்ரமணிய தேசிக பரமாச்சாரியாா் சுவாமிகள் சித்தா் பீடம் உள்ளது. இப்பீடத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஆனி மாதம் விசாக நட்சத்திரத்தன்று மஹா குருபூஜை விழா நடைபெறுவது வழக்கம்.

அதன்படி, இந்த ஆண்டுக்கான குருபூஜை விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி ஸ்ரீலஸ்ரீ சுப்ரமணிய தேசிகரின் அலங்கரிக்கப்பட்ட திரு உருவப்படம், பண்ருட்டி அருள்மிகு சோமநாத சுவாமி கோயிலில் இருந்து சித்தா் பீடத்துக்கு சிவ வாத்தியங்கள் முழங்க கொண்டுவரப்பட்டது. பின்னா் மஹா திருமஞ்சனமும், தீபாராதனையும், அன்னதானமும் நடைபெற்றது.

இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா்.

Story image

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை திருவாவடுதுறை ஆதீனம் மற்றும் திருவதிகை பொதுமக்கள் செய்திருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.