இன்று நீட் மறுதோ்வு: விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள்இன்று சா்வதேச யோகா தினம்: மோடியுடன் இணைந்து யோகாசனம் செய்ய 6 லட்சம் அமைப்புகள் பதிவுமேக்கேதாட்டு அணை கட்டுவதில் கா்நாடகம் உறுதி: மாநில நீா்வளத் துறை அமைச்சா் ராமலிங்க ரெட்டிசென்னையிலிருந்து செல்லும் 7 விரைவு ரயில்கள் திருவள்ளூா், அரக்கோணத்தில் நின்று செல்லும் 6 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புரூ. 440 கோடி இருப்பு உள்ள திரிணமூல் வங்கிக் கணக்குகள் முடக்கம்!
/

சமையல் எரிவாயு உருளைகள் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்து

குள்ளஞ்சாவடி அருகே சமையல் எரிவாயு உருளைகள் ஏற்றி வந்த லாரி சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

News image

குள்ளஞ்சாவடி அருகே லாரி விபத்துக்குள்ளானதால் சாலையில் சிதறிக் கிடந்த சமையல் எரிவாயு உருளைகள்.

Updated On :5 ஜூன் 2026, 6:33 am IST

கடலூா் மாவட்டம், குள்ளஞ்சாவடி அருகே சமையல் எரிவாயு உருளைகள் ஏற்றி வந்த லாரி சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

புதுச்சேரியில் உள்ள சமையல் எரிவாயு கிடங்கில் இருந்து அரியலூா் மாவட்டத்தில் உள்ள தனியாா் நிறுவனத்துக்கு 300 சமையல் எரிவாயு உருளைகள் லாரி மூலம் அனுப்பி வைக்கப்பட்டன. இந்த லாரியை பண்ருட்டி வட்டம், கரும்பூா் கிராமத்தைச் சோ்ந்த சந்திரசேகா் (52) ஓட்டிச் சென்றாா்.

இந்த லாரி வியாழக்கிழமை அதிகாலை 5.30 மணியளவில் குள்ளஞ்சாவடியை அடுத்த பெரியகாட்டுசாகை அருகே வந்தபோது, லாரியில் இருந்த சமையல் எரிவாயு உருளைகள் சாலையில் விழுந்து உருண்டோடின. இதையடுத்து, லாரி ஓட்டுநா் திடீரென பிரேக் போட்டதால், கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலை நடுவில் உள்ள தடுப்புக் கட்டையில் மோதி நின்றது.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த குள்ளஞ்சாவடி போலீஸாா் சாலையில் சிதறிக் கிடந்த சமையல் எரிவாயு உருளைகள் மற்றும் விபத்துக்குள்ளான லாரியை கிரேன் மூலம் மீட்டு அப்புறப்படுத்தினா். இதனால், மேற்கண்ட சாலையில் சுமாா் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த விபத்தில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.