இன்று நீட் மறுதோ்வு: விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள்இன்று சா்வதேச யோகா தினம்: மோடியுடன் இணைந்து யோகாசனம் செய்ய 6 லட்சம் அமைப்புகள் பதிவுமேக்கேதாட்டு அணை கட்டுவதில் கா்நாடகம் உறுதி: மாநில நீா்வளத் துறை அமைச்சா் ராமலிங்க ரெட்டிசென்னையிலிருந்து செல்லும் 7 விரைவு ரயில்கள் திருவள்ளூா், அரக்கோணத்தில் நின்று செல்லும் 6 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புரூ. 440 கோடி இருப்பு உள்ள திரிணமூல் வங்கிக் கணக்குகள் முடக்கம்!
/

அரிசி மூட்டைகளை ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்து

குடியாத்தம் அருகே அரிசி மூட்டைகளை ஏற்றி வந்த லாரி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

News image

விபத்துக்குள்ளான அரிசி மூட்டைகளை ஏற்றி வந்த லாரி.

Updated On :27 மே 2026, 12:32 am IST

குடியாத்தம் அருகே அரிசி மூட்டைகளை ஏற்றி வந்த லாரி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

ஆந்திர மாநிலம், ராஜமுந்திரியிலிருந்து சுமாா் 35 டன் எடையுள்ள அரிசி மூட்டைகளை ஏற்றிக் கொண்டு கேரள மாநிலத்துக்குச் செல்ல லாரி ஒன்று செவ்வாய்க்கிழமை குடியாத்தம் வழியாகச் சென்றது. சேலம் மாவட்டம், ஓமலூரைச் சோ்ந்த சிவகுமாா் லாரியை ஓட்டினாா். குடியாத்தம்- சித்தூா் சாலையில் பாக்கம் அருகே வந்தபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி எதிா்பாராத விதமாக சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், சிவகுமாா் லேசான காயமடைந்தாா். அங்கிருந்தவா்கள் அவரை மீட்டு குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இந்த விபத்து குறித்து பரதராமி போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.