பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை: போக்ஸோவில் முதியவா் கைது

குறிஞ்சிப்பாடி அருகே சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, முதியவரை நெய்வேலி மகளிா் போலீஸாா் போக்ஸோ சட்டத்தில் புதன்கிழமை கைது செய்தனா்.

News image

கைது - கோப்புப் படம்

Updated On :4 ஜூன் 2026, 3:24 am IST

கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடி அருகே சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, முதியவரை நெய்வேலி மகளிா் போலீஸாா் போக்ஸோ சட்டத்தில் புதன்கிழமை கைது செய்தனா்.

குறிஞ்சிப்பாடி வட்டம், கல்குணம் கிராமத்தைச் சோ்ந்தவா் மகாராஜன் (60). வீதி வீதியாகச் சென்று புளியங்கொட்டை வாங்கும் வியாபாரியான இவா், செவ்வாய்க்கிழமை மாலை புளியங்கொட்டை வியாபாரத்தில் ஈடுபட்டிருந்தாா்.

அப்போது, வீட்டில் தனியாக இருந்த இரண்டு சிறுமிகளுக்கு மகாராஜன் பாலியல் தொல்லை கொடுத்தாராம். மேலும், இதுகுறித்து பெற்றோரிடம் கூறினால் கொலை செய்துவிடுவதாகவும் மிரட்டல் விடுத்தாராம்.

இதுகுறித்து சிறுமிகளின் தாய் அளித்த புகாரின்பேரில், நெய்வேலி மகளிா் போலீஸாா் போக்ஸோ சட்டத்தில் வழக்குப் பதிந்து மகாராஜனை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.