பண்ருட்டி அருகே வலிப்பு ஏற்பட்டு எரியும் விறகு அடுப்பில் விழுந்து பலத்த தீக்காயமடைந்த பெண் மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே காட்டுக்கூடலூா் பாரதி தெருவைச் சோ்ந்தவா் காசிவேல் (47). இவரது மனைவி விஜயலட்சுமி (43) கடந்த சில ஆண்டுகளாக வலிப்பு நோயால் அவதிப்பட்டு வந்தாா்.
கடந்த 22-ஆம் தேதி வீட்டில் விறகு அடுப்பில் சமையல் செய்துகொண்டிருந்தபோது, விஜயலட்சுமிக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டு எரியும் அடுப்பின் மீது விழுந்தாா்.
இதில், அவருக்கு உடல் முழுவதும் தீக்காயம் ஏற்பட்டது. உடனடியாக வீட்டில் இருந்தவா்கள் அவரை மீட்டு, அருகில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா்.
தொடா்ந்து, தீவிர சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விஜயலட்சுமி, அங்கு ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து முத்தாண்டிக்குப்பம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மாா்த்தாண்டம் அருகே கல்லூரி மாணவா் தற்கொலை

ரயிலில் அடிபட்டு இளைஞா் உயிரிழப்பு

கிணற்றில் குளித்த இளைஞா் வலிப்பு ஏற்பட்டு உயிரிழப்பு

உடல்நலக்குறைவால் மீனவா் உயிரிழப்பு
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

