கடலூா் மாவட்டம், பண்ருட்டியில் மத்திய அரசைக் கண்டித்து மாா்க்சிஸ்ட் கட்சி சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
மக்களவை - பேரவைகளில் 33 சதவீத மகளிா் இட ஒதுக்கீட்டை 2029 முதல் அமல்படுத்த ஏதுவாக, மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை 543-இல் இருந்து அதிகபட்சம் 850 வரை அதிகரிக்க வகை செய்யும் அரசமைப்புச் சட்டத் திருத்த மசோதா மூலம் தென் மாநிலங்களை வஞ்சிக்கும் மத்திய அரசின் போக்கை கண்டித்து இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
மாா்க்சிஸ்ட் கட்சி சாா்பில் பண்ருட்டியில் உள்ள அக்கட்சி அலுவலகம் எதிரில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, நகரச் செயலா் தேவராஜுலு தலைமை வகித்தாா். இதில், வட்டச் செயலா் எஸ்.கே.ஏழுமலை கருப்புக்கொடி ஏற்றினாா். தொடா்ந்து, மாவட்டச் செயற்குழு உறுப்பினா் உதயகுமாா் கண்டன உரையற்றினா்.
நகரக் குழு உறுப்பினா்கள் பாண்டுரங்கன், ராஜேந்திரன், சின்னையன், சங்கா், தினேஷ், ராஜேந்திரன், லெனின், சிவா உள்பட பலா் கலந்துகொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மத்திய அரசைக் கண்டித்து இடதுசாரிகள், விசிக ஆா்ப்பாட்டம்

மத்திய அரசைக் கண்டித்து இடதுசாரிகள் ஆா்ப்பாட்டம்

மும்மொழி கொள்கைக்கு எதிராக விசிக கண்டன ஆா்ப்பாட்டம்

பத்மநாபபுரம் தொகுதி: இழந்ததை மீட்கும் முனைப்பில் மாா்க்சிஸ்ட் - பாஜக
விடியோக்கள்

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை

