சொத்துகளை அபகரித்தவா் மீது நடவடிக்கைக் கோரி, இரு குழந்தைகளுடன் கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் சாலை மறியலில் ஈடுபட்ட பெண்ணை போலீஸாா் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனா்.
கடலூா் நகா் பகுதியைச் சோ்ந்தவா் பூவராகசாமி மனைவி காயத்ரி (26). இவா், மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் தனது 2 குழந்தைகளுடன் சாலையில் அமா்ந்து மறியலில் ஈடுபட்டாா். தகவலறிந்த கடலூா் போலீஸாா் நிகழ்விடத்துக்குச் சென்று காயத்ரியிடம் விசாரித்தனா்.
இதில், அவரது கணவரின் சகோதரா்கள் சொத்துகளை அபகரித்துக்கொண்டு கொலை மிரட்டல் விடுப்பதாகவும், காவல் நிலையத்தில் பல முறை புகாரளித்த பிறகும் எந்தவொரு நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் தெரிவித்தாா். இதையடுத்து, போலீஸாா் உரிய நடவடிக்கை எடுப்பதாகக் கூறி, காய்தரியை சமாதானப்படுத்தி, அனுப்பி வைத்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வெயிலின் தாக்கத்தை சமாளிக்க பசுமை பந்தல் அமைப்பு

கடலூா் எஸ்.பி. அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயற்சி: போலீஸாா் தடுத்து விசாரணை

விழுப்புரம், கடலூா் ஆட்சியரகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்
வாக்குப்பதிவை சமூக வலைதளத்தில் வெளியிட்ட இருவா் கைது
விடியோக்கள்

நான்தான் கிங் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

