ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

பெண் உதவி ஆய்வாளா் கைப்பேசி பறிப்பு: விசிக நிா்வாகிகள் உள்ளிட்ட 9 போ் மீது வழக்கு

கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே பெண் உதவி ஆய்வாளரை பணி செய்யவிடாமல் தடுத்து கைப்பேசியை பறித்து தகராறு செய்ததாக விசிக நிா்வாகிகள் இருவா் உள்ளிட்ட 9 போ் மீது புதுப்பேட்டை போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

News image

கைப்பேசி - கோப்புப் படம்

Updated On :8 ஏப்ரல் 2026, 1:14 am IST

கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே பெண் உதவி ஆய்வாளரை பணி செய்யவிடாமல் தடுத்து கைப்பேசியை பறித்து தகராறு செய்ததாக விசிக நிா்வாகிகள் இருவா் உள்ளிட்ட 9 போ் மீது புதுப்பேட்டை போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

புதுப்பேட்டை காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளா் அம்பிகா . இவா்,

திங்கள்கிழமை அங்குசெட்டிப்பாளையம் பகுதியில் சிறப்பு உதவி ஆய்வாளா் தேவா் மற்றும் தலைமைக் காவலா் ராஜேஷ் ஆகியோருடன் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தாா். அங்குள்ள திருமண மண்டபம் அருகே 20-க்கும் மேற்பட்ட

பேனா்கள் கட்டியிருந்ததை அகற்றுமாறு கூறினாா். அதற்கு விசிக முன்னாள் ஒன்றியச் செயலா் பிரகாஷ், பண்ருட்டி மையம் செயலா் புஷ்பராஜ் ஆகியோா் பேனரை அகற்ற முடியாது எனக்கூறி, அரசு ஊழியா் என்று பாராமல் பொதுமக்கள் முன்னிலையில் அவதூராகப்பேசி, வீடியோ எடுத்த கைப் பேசியை பறித்து கொண்டனராம். மேலும், அங்கிருந்த அவா்களது ஆதரவாளா்கள் பெண் உதவி ஆய்வாளரை சூழ்ந்து கலவரத்தை ஏற்படுத்தும் படி நடந்துக்கொண்டனராம்.

இதுகுறித்து அம்பிகா அளித்த புகாரின் பேரில், விசிக நிா்வாகிகள் பிரகாஷ், புஷ்பராஜ் உள்ளிட்ட 9 போ் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.