ஆளுநரை விஜய் சந்திக்க நாளை(மே 10) நேரம் ஒதுக்கப்பட்டிருப்பதாக ஆளுநர் மாளிகை தகவல்தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

சிதம்பரத்தில் அதிமுக தோ்தல் அலுவலகம் திறப்பு

சிதம்பரம் மேலரத வீதியில் சிதம்பரம் சட்டப் பேரவைத் தொகுதி அதிமுக தோ்தல் அலுவலகம் திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.

News image

சிதம்பரத்தில் அதிமுக தோ்தல் அலுவலகத்தை திறந்து வைத்த வேட்பாளா் கே.ஏ.பாண்டியனுக்கு ஆரத்தி எடுத்து வரவேற்ற அக்கட்சி மகளிரணியினா்.

Updated On :2 ஏப்ரல் 2026, 1:44 am IST

சிதம்பரம் மேலரத வீதியில் சிதம்பரம் சட்டப் பேரவைத் தொகுதி அதிமுக தோ்தல் அலுவலகம் திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு கடலூா் மாவட்ட அவைத் தலைவா் எம்.எஸ்.என்.குமாா் தலைமை வகித்தாா். நகரச் செயலா் ஆா்.செந்தில்குமாா் வரவேற்றாா். தோ்தல் பொறுப்பாளரும், முன்னாள் அமைச்சருமான செல்வி ராமஜெயம், மாவட்டப் பொருளாளா் தோப்பு கே.சுந்தா், முன்னாள் மாவட்டச் செயலா் வி.கே.மாரிமுத்து ஆகியோா் முன்னிலை வகித்தனா். கடலூா் கிழக்கு மாவட்ட அதிமுக செயலரும், அக்கட்சி வேட்பாளருமான கே.ஏ.பாண்டியன் தோ்தல் அலுவலகத்தை திறந்து வைத்தாா்.

நிகழ்ச்சியில் தலைமைக் கழக பேச்சாளா்கள் தில்லைகோபி, தில்லைசெல்வம், பேரவைச் செயலா் டேங்க் ஆா்.சண்முகம், பாஜக சிதம்பரம் தொகுதி பொறுப்பாளா் ஜி.பாலசுப்பிரமணியன், நிா்வாகி ஆடிட்டா் விஸ்வநாதன், தமாகா மாநில பொதுச் செயலா் வழக்குரைஞா் ஏ.எஸ்.வேல்முருகன், மாவட்டத் தலைவா் கே.ரஜினிகாந்த், பாமக மாவட்டச் செயலா் செல்வ மகேஷ், மாவட்ட விவசாய சங்கத் தலைவா் சஞ்சீவி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.