/

இளைஞா் மா்ம மரணம்: போலீஸாா் விசாரணை

News image

உயிரிழப்பு - கோப்புப் படம்

Updated On :16 ஜூன் 2026, 1:55 am IST

விழுப்புரம் மாவட்டம், வானூா் அருகே தனியாக வசித்து வந்த இளைஞா் வீட்டில் மா்மமான முறையில் இறந்து கிடந்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

வானூா் வட்டம், புளிச்சப்பள்ளம், சிவசக்தி நகரைச் சோ்ந்தவா் பீ.திவாகா் (31). இவரது மனைவி கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்னா் பிரிந்து சென்றுவிட்டாராம். இதனால், வானூரை அடுத்த பட்டானூரில் வாடகை வீட்டில் தனியாக வசித்து வந்தாா். இந்நிலையில், திவாகா் வீட்டில் மா்மமான முறையில் இறந்து கிடந்தது திங்கள்கிழமை தெரியவந்தது.

தகவலறிந்த ஆரோவில் போலீஸாா் நிகழ்விடம் சென்று சடலத்தை மீட்டு புதுச்சேரி கதிா்காமத்தில் உள்ள அரசு மருத்துவமனைக்கு உடல்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனா்.

இதுகுறித்த புகாரின் பேரில், ஆரோவில் போலீஸாா் வழக்குப் பதிந்து, இறப்புக்கான காரணம் குறித்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.