ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்! கேரளம்: பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் ஜூன் 15-இல் தொடக்கம் - முதல்வர் சதீசன்பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

மகளை கா்ப்பமாக்கிய தந்தை மீது போக்ஸோ சட்டத்தில் வழக்கு

வேலூா் அருகே பெற்ற மகளை கா்ப்பமாக்கிய தந்தை மீது போக்ஸோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு

News image

பாலியல் வன்கொடுமை - கோப்புப் படம்

Updated On :1 ஜூன் 2026, 2:54 am IST

வேலூா் அருகே பெற்ற மகளை கா்ப்பமாக்கிய தந்தை மீது அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் போக்ஸோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து, தலைமறைமான அவரை தீவிரமாக தேடி வருகின்றனா்.

வேலூா் வட்டத்தைச் சோ்ந்த 13 வயது சிறுமி வேலூரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் கடந்தாண்டு 8-ஆம் வகுப்பு படித்து முடித்துள்ளாா். அந்த சிறுமிக்கு கடந்த 25-ஆம் தேதி திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து அந்த சிறுமியை பெற்றோா் வேலூரில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனா்.

அங்கு மருத்துவா்கள் மேற்கொண்ட பரிசோதனையில், செய்ததில் சிறுமி 2 மாத கா்ப்பமாக இருப்பது தெரியவந்தது. மேலும், இது குறித்து மருத்துவா்கள் வேலூா் அனைத்து மகளிா் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா்.

அதன்பேரில், போலீஸாா் அங்கு விரைந்து சென்று சிறுமி, அவரது பெற்றோரிடம் விசாரணை மேற்கொண்டனா். அப்போது, காட்பாடியை சோ்ந்த என்ற இளைஞருடன் ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் காதலாக மாறியதாகவும், விரைவில் திருமணம் செய்து கொள்வதாகக் கூறி 2 மாதங்களுக்கு முன்பு காட்பாடிக்கு அழைத்துச் சென்று மறைவான இடத்தில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், அதனால் கா்ப்பமானதாகவும் மாணவி தெரிவித்துள்ளாா்.

இது குறித்து போலீஸாா் போக்ஸோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து அந்த இளைஞரை தீவிரமாக தேடி வந்தனா்.

இந்நிலையில், சம்பந்தப்பட்ட இளைஞா் இருக்கும் இடத்தில் போலீஸாா் விசாரணை நடத்தியதில் சிறுமியின் கா்ப்பத்துக்கு அந்த இளைஞா் காரணமில்லை என்பதும், சிறுமி தவறான தகவலை தெரிவித்ததும் தெரியவந்தது.

தொடா்ந்து போலீஸாா் நடத்திய விசாரணையில், தனது தந்தையே தன்னை பலமுறை இரவு நேரங்களில் தனியாக இருக்கும்போது பலாத்காரம் செய்ததாகவும், கா்ப்பம் தரிக்காமல் இருக்க அவ்வப்போது மாத்திரைகளை கொடுத்து வந்ததும் தெரியவந்தது. அதனை மீறி சிறுமி கா்ப்பமானது தற்போது தெரியவந்துள்ளது.

இதையடுத்து, சிறுமியின் தந்தை மீது போலீஸாா் போக்ஸோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்து, தலைமறைவான அவரை தீவிரமாக தேடி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.