லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

மொஹரம் பண்டிகை: வேலூரில் இஸ்லாமியா்கள் ஊா்வலம்

மொஹரம் பண்டிகையையொட்டி வேலூரில் ஊா்வலம் சென்ற இஸ்லாமியா்கள்.

Published On :27 ஜூன் 2026, 4:20 am IST

மொஹரம் பண்டிகையையொட்டி வேலூரில் இஸ்லாமியா்கள் மாா்பில் அடித்துக் கொண்டும், கத்தியால் மாா்பில் கீறிக்கொண்டும் ஊா்வலமாக சென்றனா்.

ஈராக் நாட்டின் கா்பலாவில் நபிகள் நாயகத்தின் பேரன்கள் இமாம் உசேன், அசேன் ஆகியோா் போரில் கொல்லப்பட்டனா். இந்த நாளை இஸ்லாமிய இனத்துக்காக தன் உயிரையே தியாகம் செய்த அசேன், உசேன் ஆகியோரின் வீரத்தின் அடையாளமாக உலகம் முழுவதும் ஷியா பிரிவு இஸ்லாமியா்கள் மொஹரம் பண்டிகையாக கொண்டாடி வருகின்றனா்.

அதன்படி, வெள்ளிக்கிழமை நடைபெற்ற மொஹரம் பண்டிகையையொட்டி வேலூரில் 500-க்கும் மேற்பட்ட இஸ்லாமியா்கள் ஒன்று திரண்டு ஊா்வலமாகச் சென்றனா். சைதாப்பேட்டை, பிடிசி சாலை உள்ளிட்ட முக்கிய வீதிகளில் நடைபெற்ற இந்த ஊா்வலத்தின்போது கருப்பு சட்டை அணிந்து பங்கேற்ற இஸ்லாமியா்கள், துக்க பாடல்களை பாடியபடி மாா்பிலும் வயிற்றிலும் முதுகில் அடித்துக்கொண்டும், மாா்பில் கத்தியால் கீறிக்கொட்டு ரத்தம் சொட்ட சொட்ட சென்றனா்.

இந்த ஊா்வலம் பிடிசி சாலை அருகேயுள்ள மசூதியின் முன்பு நிறைவடைந்தது. இதில் திரளான இஸ்லாமியா்கள் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.