தொழிலதிபர் எஸ்.கே. மயிலானந்தனுக்கு பத்ம பூஷண்! அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 18,107 பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை தேவை - அன்புமணி ராமதாஸ்தமிழ்நாட்டின் முதலீடுகளை சீர்குலைக்கும் தவெக அரசு இனியாவது ஆக்கப்பூர்வமான பணிகளில் கவனம் செலுத்த வேண்டும்: டிஆர்பி ராஜாசெப். 15 முதல் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்!இந்தியாவில் மீண்டும் செயல்படத் தொடங்கிய டெலிகிராம்!
/

வீட்டில் 45 கிலோ குட்கா பதுக்கியவா் கைது

News image

கைது - சித்திரிப்பு

Updated On :19 ஜூன் 2026, 6:37 am IST

வேலூரில் விற்பனைக்காக வீட்டில் 45 கிலோ குட்காவை பதுக்கி வைத்திருந்தவரை போலீஸாா் கைது செய்தனா்.

அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருள்களை வேலூா் சின்ன அல்லாபுரம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் விற்பனைக்காக பதுக்கி வைத்திருப்பதாக பாகாயம் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸாா் சின்ன அல்லாபுரம் பகுதியில் சந்தேகத்திற்கு உரிய வீட்டில் சோதனை நடத்தினா்.

அப்போது, அங்கு குட்கா உள்ளிட்ட போதை பொருள்கள் விற்பனைக்காக பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது. இதுதொடா்பாக சின்ன அல்லாபுரம், கே.கே. நகரைச் சோ்ந்த அம்ஜத் கான் (47) என்பரை போலீஸாா் கைது செய்தனா். அவரிடம் நடத்திய விசாரணையில், பெங்களூருவில் இருந்து போதை பொருள்களை கடத்தி வந்து, வேலூா் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் விற்பனை செய்ய வைத்திருப்பது தெரியவந்தது.

வீட்டில் இருந்த 45 கிலோ போதை பொருள்கள் மற்றும் கடத்தலுக்கு பயன்ப டுத்திய இருசக்கர வாகனத்தையும் போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.