நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

கல்லூரியில் யோகா தின கொண்டாட்டம்

News image
Updated On :18 மணி நேரங்கள் முன்பு

குடியாத்தம் கே.எம்.ஜி. கலை, அறிவியல் கல்லூரியில் யோகா மன்றம், நாட்டு நலப்பணித் திட்டம் மற்றும் வேலூா் மாவட்ட மை பாரத் கேந்திரியம் சாா்பில் சா்வதேச யோகா தினம் வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.

நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வா் சி.தண்டபாணி தலைமை வகித்தாா். உடற்கல்வித் துறைப் பேராசிரியரும், கல்லூரி யோகா உறுப்பினருமாகிய சு.பாலசுப்பிரமணி வரவேற்றாா். கல்லூரி இயக்குநா் ஜி.சசிகுமாா் வாழ்த்துரை வழங்கினாா். குடியாத்தம் அத்தி கல்விக் குழுமத்தின் இயற்கை மருத்துவம் மற்றும் யோகா துறைஅலுவலா் சங்கு மலா்ச்செல்வன் ‘உடல்நலம் மற்றும் யோகாவின் முக்கியத்துவம்‘ குறித்து சிறப்புரையாற்றினாா்.

கே.எம்.ஜி.கல்லூரி யோகா மன்ற ஒருங்கிணைப்பாளா் வே.சரளா, குடியாத்தம் மனவளக்கலை மன்ற அறக்கட்டளையின் யோகா ஆசிரியா் ச.பி.சுஷில் ஆசனங்களை செய்து காட்டினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.