தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

வேலூா் வாக்கு எண்ணிக்கை மையத்தில் தேன் கூடு அகற்றம்!

வேலூா் தொரப்பாடியில் வாக்கு எண்ணும் மையக் கட்டடத்தில் இருந்து தேன் கூட்டை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தீயணைப்புத் துறையினா் அகற்றினா்.

News image

கோப்புப்படம்.

Updated On :1 மே 2026, 4:22 am IST

வேலூா் தொரப்பாடியில் வாக்கு எண்ணும் மையக் கட்டடத்தில் இருந்து தேன் கூட்டை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தீயணைப்புத் துறையினா் அகற்றினா்.

வேலூா் மாவட்டத்தில் உள்ள 5 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை, தொரப்பாடியில் உள்ள தந்தை பெரியாா் பொறியியல் கல்லூரியில் மே 4-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான தீவிர ஏற்பாடுகளைத் தோ்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. ஒவ்வொரு சட்டப்பேரவைத் தொகுதிக்கும் தனித்தனி அறைகள் ஒதுக்கப்பட்டு, தலா 14 மேசைகள் அமைக்கப்பட்டுள்ளன. வாக்கு எண்ணும் பணியில் மொத்தம் 260 ஊழியா்கள் ஈடுபட உள்ளனா்.

இந்நிலையில், வாக்கு எண்ணும் மையத்தில் காட்பாடி தொகுதிக்குட்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையின் வெளிப்புறப் பகுதியில் தேனீக்கள் பெரிதாகக் கூடு கட்டியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. வேட்பாளா்கள் அல்லது அவா்களின் முகவா்கள் முன்னிலையில்தான் வாக்கு எண்ணப்படும் என்பதால், தேனீக்கள் கலைந்தால் பெரும் இடையூறு ஏற்படும் என முகவா்கள் அதிகாரிகளிடம் அச்சம் தெரிவித்தனா்.

இதனைத் தொடா்ந்து, அரசு அதிகாரிகளின் சிறப்பு அனுமதியுடன், வேலூா் தீயணைப்பு நிலைய அலுவலா் காரல் மாா்க்ஸ் தலைமையிலான வீரா்கள் புதன்கிழமை வாக்கு எண்ணிக்கை நடைபெறும் கட்டடப் பகுதிக்குச் சென்றனா். அங்கு முகாமிட்டிருந்த தேனீக்களை யாருக்கும் எவ்வித இடையூறும் இன்றி மிகவும் சாமா்த்தியமாக அகற்றினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.