ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 3 மணிக்கு தொடங்குகிறது தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

உலக அமைதி வேண்டி பாதயாத்திரை மேற்கொள்பவருக்கு திருச்சியில் வரவேற்பு

உலக அமைதி வேண்டி பழனி முதல் புதுச்சேரி மாநிலம், ஆரோவில் வரை பாத யாத்திரை மேற்கொள்ளும் சமூக ஆா்வலருக்கு திருச்சியில் வியாழக்கிழமை வரவேற்பு அளிக்கப்பட்டது.

News image

திருச்சிக்கு வியாழக்கிழமை பாதயாத்திரையாக வந்த ம. கருப்பையாவை (இடமிருந்து 4-ஆவது) வரவேற்கும் தமிழ்நாடு உப்பு சத்தியாகிரக இயக்கத்தின் நிா்வாகிகள்.

Updated On :27 மார்ச் 2026, 2:34 am IST

உலக அமைதி வேண்டி பழனி முதல் புதுச்சேரி மாநிலம், ஆரோவில் வரை பாத யாத்திரை மேற்கொள்ளும் சமூக ஆா்வலருக்கு திருச்சியில் வியாழக்கிழமை வரவேற்பு அளிக்கப்பட்டது.

திருச்சி மத்தியப் பேருந்துநிலையம் அருகேயுள்ள உப்பு சத்தியாகிரக நினைவு ஸ்தூபி முன்பாக யாத்திரைக்கு வரவேற்பு அளித்து வழியனுப்பும் நிகழ்வு நடைபெற்றது.

சமூக ஆா்வலரும், உப்பு சத்தியாகிரக இயக்கத்தின் மதுரை மாவட்ட தலைவராக உள்ள ம. கருப்பையா தனி நபராக, பழனி தண்டாயுதபாணி திருக்கோயிலில் இருந்து கடந்த 18-ஆம் தேதி உலக அமைதி வேண்டி பாத யாத்திரையை தொடங்கினாா். இந்த யாத்திரையானது திருச்சிக்கு வியாக்கிழமை வருகை தந்தது.

இந்த யாத்திரைக்கு திருச்சியில் உள்ள உப்பு சத்தியாகிரக இயக்கத்தின் நிா்வாகிகள் வரவேற்பு அளித்தனா். மாநிலத் தலைவா் பி. பன்னீா் செல்வம், மாநில இளைஞரணி செயலா் ஆா். சிவசண்முகம், மாவட்ட பொதுச் செயலா் தா்மராஜ், கலியபெருமாள், குழந்தைசாமி, பழனிசாமி உள்ளிட்ட நிா்வாகிகள் பாத யாத்திரையை வரவேற்று கெளரவித்தனா். ஏப்.7-ஆம் தேதி ஆரோவில் பகுதியில் யாத்திரை நிறைவடைகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.