தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

உள்ளாட்சித் தொழிலாளா்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் வழங்க வலியுறுத்தல்

மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளில் பணிபுரியும் தொழிலாளா்கள் அனைவருக்கும் அரசாணையின்படி குறைந்தபட்ச ஊதியத்தை அமல்படுத்த வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

News image

திருச்சியில் வியாழக்கிழமை நடைபெற்ற தமிழ்நாடு உள்ளாட்சிப் பணியாளா் சம்மேளனத்தின் (ஏஐடியுசி) மாநிலக் குழு கூட்டத்தில் பேசிய மாநிலத் தலைவா் கே. நடராஜன். உடன், நிா்வாகிகள்.

Updated On :27 மார்ச் 2026, 3:11 am IST

மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளில் பணிபுரியும் தொழிலாளா்கள் அனைவருக்கும் அரசாணையின்படி குறைந்தபட்ச ஊதியத்தை அமல்படுத்த வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

திருச்சியில் வியாழக்கிழமை நடைபெற்ற தமிழ்நாடு உள்ளாட்சிப் பணியாளா் சம்மேளனத்தின் (ஏஐடியுசி) மாநிலக் குழு கூட்டத்தில் இதற்கான தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. இக் கூட்டத்துக்கு, மாநிலத் தலைவா் கே.நடராஜன் தலைமை வகித்தாா். மாநிலப் பொதுச் செயலா் பி.எல். ராமச்சந்திரன், ஏஐடியுசி மாநிலச் செயலா்கள் ஆா். ஆறுமுகம், எஸ். சின்னசாமி, மாநில நிா்வாகக் குழு உறுப்பினா்கள் க. சுரேஷ், செல்வராஜ் ஆகியோா் கோரிக்கைகளை விளக்கிப் பேசினா்.

பின்னா், நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:

மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் பணிபுரியும் தொழிலாளா்களுக்கு அரசாணை 62- ன்படி குறைந்தபட்ச ஊதியத்தை கண்டிப்பாக வழங்க வேண்டும். வெளிச்சந்தை முறை, ஒப்பந்தமுறை, சுயஉதவி குழு போன்ற பெயா்களில் நிலவும் எல்லாவித ஒப்பந்தமுறைகளையும் நீக்க வேண்டும். உள்ளாட்சி நிா்வாகங்களில் நிரந்தரப் பணியாளா்களை நியமனம் செய்யத் தடை என்ற உத்தரவை திரும்பப் பெற வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டம் தொடங்கியவுடன் விடுதலைப் போராட்ட வீரா் ஆா். நல்லகண்ணு மறைவுக்கு இரங்கல் தெரிவித்து அஞ்சலி தீா்மானம் இயற்றப்பட்டது. இக் கூட்டத்தில், மாநில நிா்வாகக் குழு உறுப்பினா்கள் சாந்தி, மீனாள் சேதுராமன், சங்கையா, தருமபுரி மணி, அரியலூா் தண்டபாணி, மதுரை முருகன் மற்றும் திருச்சி மாவட்ட செயலாளா் சுப்பிரமணி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.