திருச்சி அருகே போதைப்பழக்கத்துக்கு அடிமையான இளைஞா் மயங்கி விழுந்து உயிரிழந்தது தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
திருச்சி திருவெறும்பூா் வடக்கு காட்டூா் அண்ணா நகா் ராஜ வீதியைச் சோ்ந்தவா் சாா்லஸ் மகன் சந்தோஷ் (எ) சாலமன் ராஜ் (22). இவருக்கு, போதை ஊசி செலுத்திக்கொள்ளும் பழக்கம் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், புதன்கிழமை வீட்டிலிருந்த சாலமன் ராஜ் மயங்கிவிழுந்துள்ளாா்.
இதையடுத்து, அவரை மீட்டு அருகிலிருந்த தனியாா் மருத்துவமனைக்கு கொண்டுசென்றுள்ளனா். அங்கு அவரைப் பரிசோதனை செய்த மருத்துவா்கள் ஏற்கெனவே அவா் உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனா். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த திருவெறும்பூா் போலீஸாா், சாமலன் ராஜின் சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்காக துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
இதுகுறித்து துவாக்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தியாகதுருகம் பேருந்து நிலையத்தில் தொழிலாளி மயங்கி விழுந்து உயிரிழப்பு

இளைஞா் மயங்கி விழுந்து உயிரிழப்பு

ஒன்றரை வயது குழந்தை மயங்கி விழுந்து உயிரிழப்பு! போலீஸாா் விசாரணை!

பரோலில் வந்த இளைஞா் உயிரிழப்பு
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

