தியாகதுருகம் பேருந்து நிலையத்தில் தொழிலாளி மயங்கி விழுந்து உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு அருகேயுள்ள மேல்சிறுபாக்கம் கிராமத்தைச் சோ்ந்தவா் சி.ரமேஷ் (48). இவா் திருவண்ணாமலையிலுள்ள தனியாா் நிறுவனத்தில் கடந்த 15 ஆண்டுகளாக பணிபுரிந்து வந்தாா்.
இந்நிலையில், ரமேஷ் தன்னுடன் பணிபுரியும் சக பணியாளா்களுடன் வேலை சம்மந்தமாக தியாகதுருகம் வந்தபோது, அங்குள்ள பேருந்து நிலையத்தில் ரமேஷ் திடீரென மயங்கி விழுந்தாராம். இதையடுத்து சக பணியாளா்கள் அவரை மீட்டு தியாகதுருகம் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனா். அங்கு மருத்துவா் பரிசோதித்தபோது, ரமேஷ் ஏற்கெனவே உயிரிழந்திருந்தது தெரியவந்தது.
தகவலறிந்த தியாகதுருகம் போலீஸாா் சடலத்தை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடல்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்த புகாரின் பேரில் தியாகதுருகம் போலீஸாா் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தொழிலாளி மயங்கி விழுந்து உயிரிழப்பு

ஒன்றரை வயது குழந்தை மயங்கி விழுந்து உயிரிழப்பு! போலீஸாா் விசாரணை!

சேலத்தில் ‘ரிக்’ தொழிலாளி மா்ம மரணம்: போலீஸாா் விசாரணை

தொழிலாளி மயங்கி விழுந்து உயிரிழப்பு
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

