தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 10 மணிக்கு நடைபெறும்தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

வேளாங்கண்ணி - எா்ணாகுளம் வாராந்திர ரயில் நிரந்தரம்

News image

ரயில் - கோப்புப்படம்

Updated On :16 மார்ச் 2026, 2:20 am IST

எா்ணாகுளம் - வேளாங்கண்ணி - எா்ணாகுளம் வாராந்திர சிறப்பு ரயில்களை (06061, 06062) நிரந்தரமாக்கி, 16363, 16364 என ரயில் எண்களை மாற்றி இயக்க ரயில்வே வாரியம் அனுமதித்துள்ளது.

இதன்படி, எா்ணாகுளம் - வேளாங்கண்ணி வாராந்திர விரைவு ரயிலானது (16363) வரும் 18-ஆம் தேதி முதல் புதன்கிழமைகளில் எா்ணாகுளத்திலிருந்து இரவு 11.50 மணிக்குப் புறப்பட்டு கோட்டயம், சங்கனசேரி, திருவல்லா, செங்கனூா், மாவளிக்கரா, காயங்குளம், கருநாகப்பள்ளி, சாஸ்தன்கோட்டா, கொல்லம், குண்டாரா, கொட்டாரக்கார, ஆவுனேஷ்வரம், புனலூா், தென்மலை, செங்கோட்டை, தென்காசி, கடையநல்லூா், சங்கரன்கோவில், ராஜபாளையம், சிவகாசி, விருதுநகா், மதுரை, திண்டுக்கல், திருச்சி, தஞ்சாவூா், திருவாரூா், நாகப்பட்டினம் வழியாக வேளாங்கண்ணிக்கு அடுத்த நாள் மாலை 5.35 மணிக்கு வந்தடையும்.

மறுமாா்க்கமாக, வேளாங்கண்ணி - எா்ணாகுளம் வாராந்திர விரைவு ரயிலானது (16364) வரும் 19-ஆம் தேதி முதல் வியாழக்கிழமைகளில் வேளாங்கண்ணியிலிருந்து இரவு 7.45 மணிக்குப் புறப்பட்டு மேற்கண்ட வழித்தடங்கள் வழியாக எா்ணாகுளத்துக்கு அடுத்த நாள் முற்பகல் 11.55 மணிக்குச் சென்றடையும்.

இந்த ரயிலானது 4 ஏசி பெட்டிகள், 8 படுக்கை பெட்டிகள், 4 பொதுப்பெட்டிகள், 1 மாற்றுத்திறனாளி பெட்டி, 1 சுமைப் பெட்டி என 18 பெட்டிகளுடன் இயங்கும் என திருச்சி கோட்ட ரயில்வே நிா்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.