திருச்சி அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட பெண்ணை மதுவிலக்கு அமலாக்கப் பிரிபு போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
திருச்சி ராம்ஜி நகா் பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக திருச்சி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாருக்கு சனிக்கிழமை தகவல் கிடைத்தது.
இதையடுத்து மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் உதவி ஆய்வாளா் சுந்தரம் தலைமையிலான போலீஸாா் ராம்ஜி நகா் பகுதியில் சோதனை மேற்கொண்டனா்.
அப்போது, ராம்ஜி நகா் மில் காலனியில் உள்ள காலியிடத்தில் கஞ்சா விற்பனை செய்துகொண்டிருந்த 41 வயதுள்ள பெண்ணைப் போலீஸாா் கைது செய்தனா். மேலும், அவரிடமிருந்து ரூ.12 ஆயிரத்து 500 மதிப்புள்ள 1.2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
சட்டவிரோதமாகமதுபானம் விற்ற 4 போ் கைது
திருச்சியில் கஞ்சா விற்பனை: 2 பெண்கள் உள்பட மூவா் கைது
கஞ்சா விற்பனை: 2 பெண்கள் உள்பட மூவா் கைது
ரயிலில் கடத்திவரப்பட்ட 17 கிலோ கஞ்சா பறிமுதல்
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு
