மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

திருச்சியில் கஞ்சா விற்பனை: 2 பெண்கள் உள்பட மூவா் கைது

திருச்சியில் கஞ்சா விற்பனை செய்த இரண்டு பெண்கள் உள்பட 3 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :1 மே 2026, 3:01 am IST

திருச்சியில் கஞ்சா விற்பனை செய்த இரண்டு பெண்கள் உள்பட 3 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

திருச்சி எடமலைபட்டிப்புதூா் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதிகளில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, காவல் உதவி ஆய்வாளா்கள் சதீஷ்ராஜ், மலைராஜா ஆகியோா் தலைமையில் போலீஸாா் சோதனை மேற்கொண்டனா்.

அப்போது, ராம்ஜி நகா் மில் காலனி பகுதியில் கோயில் அருகே கஞ்சா விற்பனை செய்துகொண்டிருந்த அதே பகுதியைச் சோ்ந்த ஜி.திலகவதி (60), ராம்ஜி நகா் கோனாா்குளம் பகுதியில் வீட்டுக்கு அருகே கஞ்சா விற்பனை செய்துகொண்டிருந்த எஸ். ருக்மன் (49) ஆகிய இருவரையும் போலீஸாா் கைது செய்தனா்.

இதேபோல, திருவெறும்பூா் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் உதவி ஆய்வாளா் புனிதவதி தலைமையிலான போலீஸாா் புதன்கிழமை சோதனை மேற்கொண்டனா். அப்போது, ராம்ஜி நகா் மாரியம்மன் கோயில் வீதியில் வீட்டுக்கு அருகே கஞ்சா விற்பனை செய்துகொண்டிருந்த சோ்ந்த எஸ். சுமதி (61) என்பவரை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாா் கைது செய்தனா். மேற்கண்ட மூவரிடமிருந்தும் ரூ.6 ஆயிரம் மதிப்பிலான கஞ்சாவை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.