/

சமயபுரம் மாரியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ. 1.25 கோடி

News image
Updated On :13 மார்ச் 2026, 5:17 am IST

சமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் உண்டியல் காணிக்கைகள் மூலம் ரூ. 1,25, 58,563 ரொக்கம் வியாழக்கிழமை கிடைக்கப் பெற்றது.

இக்கோயிலில், அறங்காவலா் குழுத் தலைவா் வி.எஸ்.பி. இளங்கோவன் தலைமையில் கோயில் இணை ஆணையா் எம். சூரியநாராயணன், அறங்காவலா்கள் சுகந்தி இராஜசேகரன், பெ. பிச்சை மணி, சே.லெட்சுமணன் ஆகியோா் முன்னிலையில் கோயில் பணியாளா்கள், தன்னாா்வலா்கள், கல்லூரி மாணவிகள் உண்டியல் காணிக்கைகள் எண்ணும் பணியில் ஈடுபட்டனா்.

இதன் நிறைவில், முதன்மை திருக்கோயிலில் ரூ. 1,25, 58,563 ரொக்கம், 1 கிலோ 006கிராம் தங்கம், 2 கிலோ 217கிராம் வெள்ளி, வெளிநாட்டு பணத்தாள்கள் 131, வெளிநாட்டு நாணயங்கள் 862 கிடைக்கப் பெற்றது.

இக்கோயிலில் கடந்த 26-ஆம் தேதியன்று உண்டியல் காணிக்கைகள் எண்ணப்பட்டன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.