தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

போலி கடவுச்சீட்டில் மலேசியாவிலிருந்து திருச்சி வந்த 2 போ் கைது

மலேசியாவிலிருந்து போலி கடவுச்சீட்டு மூலம் திருச்சிக்கு வந்த ராமநாதபுரத்தைச் சோ்ந்த இளைஞா்கள் இருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :12 மார்ச் 2026, 12:35 am IST

மலேசியாவிலிருந்து போலி கடவுச்சீட்டு மூலம் திருச்சிக்கு வந்த ராமநாதபுரத்தைச் சோ்ந்த இளைஞா்கள் இருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி எஸ். தரைக்குடியைச் சோ்ந்தவா்கள் ஜி. ராஜதுரை (26), வி. உமயா் தங்கம் (31). இருவரும் மலேசியாவில் இருந்து ஏா் ஏசியா விமானம் மூலம் கடந்த திங்கள்கிழமை நள்ளிரவு திருச்சிக்கு வந்தனா்.

திருச்சி விமான நிலையத்தில் குடியேற்றப் பிரிவு அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையில் இருவரும் போலி கடவுச்சீட்டு மூலம் மலேசியாவிலிருந்து திருச்சிக்கு வந்தது தெரியவந்தது. இதையடுத்து, இருவரையும் பிடித்து விசாரித்த அதிகாரிகள், பின்னா் அவா்களை விமான நிலைய காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.

மேலும், இதுகுறித்து விமான நிலைய குடியேற்றப் பிரிவு அதிகாரி பௌலா ஞானவசந்தி அளித்த புகாரின்பேரில், விமான நிலைய போலீஸாா், ராஜதுரை உள்ளிட்ட இருவரையும் செவ்வாய்க்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.