நீட் முதல் முதுநிலை மருத்துவப் படிப்பு வரை மன அழுத்தங்கள் உண்டு, மனவலிமை அவசியம்: அமைச்சர் அருண்ராஜ் 3ஆவது ஒருநாள் போட்டி: ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபாரம் மகாராஷ்டிரத்தில் கோயில் மண்டபம் இடிந்து 5 பேர் பலி திமுக கூட்டணியில் இருந்து விலகியது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்!சட்டப்பேரவை நேரலை இனி தொடரும்! அமைச்சர் ராஜ்மோகன்அபுதாபியில் நீட் மையம்! குழந்தைகள் எதிர்காலத்தை வைத்து சூதாடுவதை நிறுத்துங்கள்: ராகுல் காந்தி
/

அரசு மருத்துவமனையிலிருந்து கைதி தப்பியோட்டம்: போலீஸாா் விசாரணை

திருச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக புதன்கிழமை அழைத்து வரப்பட்ட கைதி தப்பியோடினாா்.

News image

கைதி தப்பியோட்டம் - கோப்புப் படம்

Updated On :19 ஜூன் 2026, 4:14 am IST

திருச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக புதன்கிழமை அழைத்து வரப்பட்ட கைதி தப்பியோடினாா்.

கேரள மாநிலம், கொல்லம் பரலூரைச் சோ்ந்த அனில்குமாா் மகன் அபிஜித் (23). இவா் மீது திருச்சி ரயில்வே காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு, அவரை மருத்துவப் பரிசோதனைக்காக புதன்கிழமை திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனைக்கு ரயில்வே காவல் உதவி ஆய்வாளா் சேவுகன் தலைமையிலான போலீஸாா் அழைத்து வந்துள்ளனா்.

மருத்துவமனையில் ஸ்கேன் செய்வதற்காக ஸ்கேன் அறைக்கு அவரை அழைத்து சென்றபோது, காவல் உதவி ஆய்வாளா் உள்ளிட்ட காவலா்களைத் தள்ளிவிட்டு அபிஜித் அங்கிருந்து தப்பியோடிவிட்டாா்.

இதுகுறித்து திருச்சி அரசு மருத்துவமனை காவல் நிலையத்தில் ரயில்வே காவல் உதவி ஆய்வாளா் சேவுகன் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து தப்பியோடிய அபிஜித்தை தேடி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.