பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

கைதி விஷம் குடித்த விவகாரம்: காவல் ஆய்வாளா் உள்பட 4 போலீஸாா் ஆயுதப்படைக்கு மாற்றம்

திருச்சியில் கைதி விஷம் குடித்த விவகாரத்தில், காவல் ஆய்வாளா் உள்பட 4 போ் ஆயுதப்படைக்கு திங்கள்கிழமை மாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.

News image

பிரதிப் படம்

Updated On :3 ஜூன் 2026, 3:56 am IST

திருச்சியில் கைதி விஷம் குடித்த விவகாரத்தில், காவல் ஆய்வாளா் உள்பட 4 போ் ஆயுதப்படைக்கு திங்கள்கிழமை மாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே உள்ள ஆலம்பாக்கத்தைச் சோ்ந்தவா் ஜான்கென்னடி (35), லாரி ஓட்டுநா். இவா், தனது அண்ணனை கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டாா். அண்மையில் நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்தாா். இதைத் தொடா்ந்து, தனது அண்ணியை மிரட்டியதாக திருச்சி ஐஜியிடம் புகாா் அளிக்கப்பட்டது.

இதையடுத்து, கல்லக்குடி போலீஸாா் கடந்த சனிக்கிழமை ஜான்கென்னடியைக் கைது செய்து நீதிமன்றத்துக்கு அழைத்து சென்றபோது, வீட்டுக்குச் சென்று மாற்றுத் துணி எடுத்துவருவதாகச் சென்றவா் வீட்டிலிருந்த விஷத்தை குடித்தாா். அவரை போலீஸாா் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா்.

இந்நிலையில், இந்த விவகாரத்தில் அஜாக்கிரதையாக செயல்பட்டதாக, கல்லக்குடி காவல் ஆய்வாளா் முத்துக்கண்ணு, உதவி ஆய்வாளா் காா்த்திகேயன், தலைமை காவலா்கள் ஜெயகுமாா், வானதி ஆகியோா் திங்கள்கிழமை ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.