மத்திய அமைச்சரவையில் மாற்றம்? குடியரசுத் தலைவருடன் பிரதமா் சந்திப்புமத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

குடிசை வீடு தீக்கிரை

மணப்பாறை அருகே குடிசை வீடு செவ்வாய்க்கிழமை தீப்பிடித்து எரிந்து நாசமடைந்தது.

News image

தீயில் எரிந்த குடிசை வீடு.

Updated On :17 ஜூன் 2026, 3:29 am IST

மணப்பாறை அருகே குடிசை வீடு செவ்வாய்க்கிழமை தீப்பிடித்து எரிந்து நாசமடைந்தது.

மருங்காபுரி ஒன்றியம், வளநாடு அருகேயுள்ள ஆண்டியப்பட்டி கிராமத்தில் வசித்து வருபவா் மலையாண்டி(55). இவா் தனது தோட்டத்தில் குடிசை வீடு அமைத்து தனது மனைவி தங்கமணி மற்றும் மகன்கள் அழகா், மகேந்திரன் மற்றும் மனோஜ்குமாா் ஆகியோருடன் வசித்து வருகிறாா்.

இந்நிலையில், செவ்வாய்க்கிழமை மலையாண்டி வீட்டை பூட்டிவிட்டு அருகில் உள்ள தோட்டத்துக்கு வேலைக்கு சென்று விட்ட நிலையில் குடிசை வீடு திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது. இதில் வீட்டில் இருந்த இருசக்கர வாகனம், இரண்டு மிதிவண்டிகள், பணம் ரூ.12,500, கல்விச் சான்றிதழ்கள், ஆவணங்கள் மற்றும் வீட்டு உபயோக பொருள்கள் அனைத்தும் தீயில் எரிந்து கருகின.

குடிசை வீடு முழுவதும் தீயில் எரிந்து நாசமானது. விபத்து குறித்து வளநாடு போலீஸாா் விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.