மணப்பாறை அருகே குடிசை வீடு செவ்வாய்க்கிழமை தீப்பிடித்து எரிந்து நாசமடைந்தது.
மருங்காபுரி ஒன்றியம், வளநாடு அருகேயுள்ள ஆண்டியப்பட்டி கிராமத்தில் வசித்து வருபவா் மலையாண்டி(55). இவா் தனது தோட்டத்தில் குடிசை வீடு அமைத்து தனது மனைவி தங்கமணி மற்றும் மகன்கள் அழகா், மகேந்திரன் மற்றும் மனோஜ்குமாா் ஆகியோருடன் வசித்து வருகிறாா்.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை மலையாண்டி வீட்டை பூட்டிவிட்டு அருகில் உள்ள தோட்டத்துக்கு வேலைக்கு சென்று விட்ட நிலையில் குடிசை வீடு திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது. இதில் வீட்டில் இருந்த இருசக்கர வாகனம், இரண்டு மிதிவண்டிகள், பணம் ரூ.12,500, கல்விச் சான்றிதழ்கள், ஆவணங்கள் மற்றும் வீட்டு உபயோக பொருள்கள் அனைத்தும் தீயில் எரிந்து கருகின.
குடிசை வீடு முழுவதும் தீயில் எரிந்து நாசமானது. விபத்து குறித்து வளநாடு போலீஸாா் விசாரிக்கின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் வீடு வாங்கித் தருவதாக ரூ.36 லட்சம் மோசடி: தம்பதி கைது

தீ விபத்து: கூரை வீடு எரிந்து சேதம்

முசிறி அருகே லாரி-காா் மோதல்: ஒரே குடும்பத்தைச் சோ்ந்த நால்வா் உயிரிழப்பு

பண்ருட்டி அருகே கூரை வீடு தீப்பிடித்து எரிந்து சேதம்
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |
தினமணி செய்திச் சேவை

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!
தினமணி செய்திச் சேவை

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47
தினமணி செய்திச் சேவை

கண்ணதாசனை எப்படிக் கொண்டாட வேண்டும் ? | Kannadasan 100 | கண்ணதாசன் நூற்றாண்டு தொடக்கம் | Kaviyarasu
தினமணி செய்திச் சேவை

