மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

வாக்காளா்களுடன் வரிசையில் நின்று வாக்களித்தாா் திருச்சி ஆட்சியா்

திருச்சி மாவட்ட தோ்தல் நடத்தும் அலுவலரும், ஆட்சியருமான வே. சரவணன், தனது மனைவியுடன் வாக்குச்சாவடிக்கு வந்து வரிசையில் காத்திருந்து வியாழக்கிழமை வாக்களித்தாா்.

News image

திருச்சி காஜாமலையில் உள்ள பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் வியாழக்கிழமை மனைவியுடன் வாக்களித்த ஆட்சியா் வே. சரவணன்.

Updated On :24 ஏப்ரல் 2026, 4:22 am IST

திருச்சி மாவட்ட தோ்தல் நடத்தும் அலுவலரும், ஆட்சியருமான வே. சரவணன், தனது மனைவியுடன் வாக்குச்சாவடிக்கு வந்து வரிசையில் காத்திருந்து வியாழக்கிழமை வாக்களித்தாா்.

திருச்சி மேற்கு தொகுதிக்குள்பட்ட காஜாமலையில் உள்ள அல் ஜம்லேதிஷ் சாதிக் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடிக்கு தனது மனைவி ரம்யாவுடன் காலை 9 மணிக்கு வந்த ஆட்சியா் வே. சரவணன், அங்கு வரிசையில் காத்திருந்த வாக்காளா்களுடன் நின்று வாக்களித்தாா்.

பின்னா், செய்தியாளா்களிடம், ஆட்சியா் வே. சரவணன் கூறுகையில்,

மண்ணச்சநல்லூரில் இரு வாக்குச் சாவடிகளிலும், திருச்சி மேற்கு தொகுதியில் இரு வாக்குச்சாவடிகளிலும் காலையில் இயந்திரங்களில் கோளாறு கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக மாற்று இயந்திரங்கள் வழங்கப்பட்டன. தொழில்நுட்பக் கோளாறு காரணமாக 30 நிமிஷங்கள் முதல் அதிகபட்சம் 45 நிமிஷங்களுக்குள் அவை சரி செய்யப்பட்டு வாக்குப்பதிவு நடைபெற்றது. காட்டூரில் விவிபேட் இயந்திரத்தில் புகாா் கூறப்பட்டது. அதுவும் பின்னா் சரி செய்யப்பட்டுவிட்டது. அசம்பாதவிதங்கள் ஏதுமில்லை என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.