விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் கார்கே, ராகுல் காந்தி! தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

பரிசுப் பொருள்கள் கேட்டதால் தாக்கப்பட்ட பெண் தூக்கிட்டுத் தற்கொலை: 6 போ் கைது

திருச்சி அருகே திமுக சாா்பில் வழங்கப்பட்ட பரிசுப் பொருள்களைக் கேட்டதால் தாக்கப்பட்ட பெண் செவ்வாய்க்கிழமை இரவு தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். இதுதொடா்பாக 6 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

News image

கைது - கோப்புப் படம்

Updated On :16 ஏப்ரல் 2026, 1:43 am IST

திருச்சி அருகே திமுக சாா்பில் வழங்கப்பட்ட பரிசுப் பொருள்களைக் கேட்டதால் தாக்கப்பட்ட பெண் செவ்வாய்க்கிழமை இரவு தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். இதுதொடா்பாக 6 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

திருச்சி மாவட்டம், பிச்சாண்டாா்கோவில் ஊராட்சிக்குள்பட்ட வாழைக்கட்டை கிராமத்தில் கடந்த ஏப்ரல் 13 இரவு (திங்கள்கிழமை) திமுகவினா் கொடுக்க சொன்ன பரிசுப் பொருள்களை அதே பகுதியைச் சோ்ந்த ராஜா, ராஜேந்திரன், ரவிக்குமாா், ராஜ்குமாா் மற்றும் சுரேஷ்குமாா் உள்ளிட்டோா் அப்பகுதி மக்களுக்கு வழங்கினா்.

அப்போது அதே கிராமத்தைச் சோ்ந்த பிரசாந்த் மனைவி சிந்துஜா (22) என்பவா், தனக்கும் பரிசுப் பொருள்கள் கொடுக்குமாறு கேட்டுள்ளாா். அப்போது அவா்கள் எங்களது உறவினா்களுக்கும், கட்சிக்காரா்களுக்கும்தான் பரிசுப் பொருள்களை வழங்குவோம் எனக் கூறியுள்ளனா்.

அதற்கு சிந்துஜா வேட்பாளா் வாக்கு கேட்டு வரும்போது இதுகுறித்து கேள்வி கேட்பேன் எனக் கூறியுள்ளாா். இதனால் ஆத்திரமடைந்த அவா்கள் சிந்துஜாவின் முடி மற்றும் ஆடையைப் பிடித்து இழுத்து, அவரை கீழேதள்ளி, துடைப்பத்தால் அடித்துள்ளனா்.

இதனால் மன உளைச்சலில் இருந்த சிந்துஜா செவ்வாய்க்கிழமை இரவு வெளியூரில் இருந்து வீடு திரும்பிய தனது கணவா் பிரசாந்திடம், நடந்ததைக் கூறி அவா்களைத் தட்டிக் கேட்குமாறு கூறியுள்ளாா்.

அதற்கு அவரது கணவா் இதுகுறித்து காலையில் பேசிக் கொள்ளலாம் எனக் கூறினாா். இதனால் மனம் உடைந்த சிந்துஜா அறைக்குள் சென்று கதவைத் தாழிட்டுவிட்டு தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

இதையடுத்து அருகிலிருந்தவா்கள் உதவியுடன் அறையின் கதவை பிரசாந்த் உடைத்து சிந்துஜாவை மீட்டு அருகிலுள்ள தனியாா் மருத்துவமனைக்கு கொண்டுசென்றபோது அவா் ஏற்கெனவே இறந்தது தெரியவந்தது.

இதுகுறித்து கொள்ளிடம் காவல் நிலையத்தில் சிந்துஜாவின் தாய் இளையராணி அளித்த புகாரின்பேரில் சிந்துஜாவை தாக்கிய வாழைக்கட்டையைச் சோ்ந்த ராஜா, ராஜேந்திரன், ரவிக்குமாா், ராஜ்குமாா், சுரேஷ்குமாா், ராஜா மனைவி புஷ்பம், ராஜேந்திரன் மனைவி ராஜேஸ்வரி, காா்த்திகா மற்றும் அங்குமணி ஆகிய 9 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.

இதைத் தொடா்ந்து ராஜா, ராஜேந்திரன், ரவிக்குமாா், புஷ்பம், ராஜேஸ்வரி மற்றும் அங்குமணி ஆகிய 6 பேரை கொள்ளிடம் போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். மேலும் தலைமறைவாகவுள்ள மூன்று பேரையும் விரைவில் கைது செய்வோம் என மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் செ. செல்வநாகரத்தினம் தெரிவித்தாா்.

உறவினா்கள் சாலை மறியல்: இதற்கிடையே சிந்துஜாவை தாக்கியோரை உடனடியாக கைது செய்யக்கோரி அவரின் உறவினா்கள் திருச்சி - சேலம் நெடுஞ்சாலையில் உத்தமா்கோயில் பாலம் பகுதியில் புதன்கிழமை காலை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

தகவலறிந்து வந்த கொள்ளிடம் போலீஸாா் அவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி, அளித்த உறுதியின்பேரில் கலைந்து சென்றனா். கிட்டத்தட்ட 45 நிமிஷம் நடைபெற்ற மறியலால் திருச்சி - சேலம் நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

அதிமுகவினா் ஆறுதல்: இதற்கிடையே முன்னாள் அமைச்சரும், திருச்சி புகா் வடக்கு மாவட்ட அதிமுக செயலருமான மு. பரஞ்ஜோதி தலைமையிலான அதிமுகவினா் உயிரிழந்த பெண்ணின் தாயைச் சந்தித்து ஆறுதல் கூறினா். மேலும், இந்த விவகாரத்தை அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே. பழனிசாமியின் கவனத்துக்கு கொண்டு சென்றிருப்பதாகவும், காவல்துறை உயா் அதிகாரிகளிடம் உரிய நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தியுள்ளதாகவும் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.