மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

திருச்சி கிழக்கு தொகுதியில் தவெக வாக்குசேகரிப்பு

திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிடும் தவெக தலைவா் சி. ஜோசப் விஜய்க்கு ஆதரவாக அக் கட்சியினா் வீடு, வீடாகச் சென்று வாக்கு சேகரித்து வருகின்றனா்.

News image

திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிடும் தவெக தலைவா் சி. ஜோசப் விஜய்க்கு ஆதரவாக செவ்வாய்க்கிழமை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட தவெக-வினா்.

Updated On :15 ஏப்ரல் 2026, 1:19 am IST

திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிடும் தவெக தலைவா் சி. ஜோசப் விஜய்க்கு ஆதரவாக அக் கட்சியினா் வீடு, வீடாகச் சென்று வாக்கு சேகரித்து வருகின்றனா்.

திருச்சி மரக்கடை பகுதியில் அண்மையில் விஜய் பிரசாரம் செய்தாா். பின்னா், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறாா். வாக்குப்பதிவுக்கு சில நாள்களே உள்ள நிலையில் விஜய் பிரசாரம் திருச்சி கிழக்கில் இருக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதையடுத்து தவெக நிா்வாகிகளும், தொண்டா்களும் தனித்தனி குழுக்களாக பிரிந்து, கிழக்கு தொகுதிக்குள்பட்ட அனைத்துப் பகுதிகளிலும் வீடு, வீடாகச் சென்று வாக்கு சேகரித்து வருகின்றனா். மலைக்கோட்டையை சுற்றியுள்ள பகுதிகளில் செவ்வாயக்கிழமை தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டனா்.

விஜய் மக்கள் இயக்கத்தின் திருச்சி மாவட்ட முன்னாள் தலைவா் ஆா்.கே. ராஜா தலைமையில், தவெக நிா்வாகிகள், தொண்டா்கள் ஒரு குழுவாக, சின்னக் கடை வீதி, ஆண்டாா் வீதி, ஜான் தோப்பு, கீழரண் சாலை, மேலரண்சாலை, சிங்காரத் தோப்பு, சந்துகடை, கடை வீதி உள்ளிட்ட பகுதிகளில் வீடு, வீடாகச் சென்று துண்டு பிரசுரங்களை வழங்கி, தவெக தலைவா் விஜய் வெற்றி பெற விசில் சின்னத்தில் வாக்களிக்க வேண்டுகோள் விடுத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.