மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

திருச்சி கிழக்கு தொகுதியில் ஏப்.2-ல் தவெக தலைவா் விஜய் வேட்புமனு தாக்கல்

திருச்சி கிழக்கு தொகுதியில் ஏப்.2-ல் தவெக தலைவா் விஜய் வேட்புமனு தாக்கல் செய்யவுள்ளார்...

News image

தவெக தலைவர் விஜய். - படம்: எக்ஸ் / டிவிகே ஐடி விங்க் அபிஷியல்.

Updated On :30 மார்ச் 2026, 3:16 am IST

திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிடுவதற்காக தமிழக வெற்றிக் கழகத் தலைவா் விஜய் ஏப்.2-ஆம் தேதி வேட்பு மனுத்தாக்கல் செய்யவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தவெக தலைவா் விஜய், பெரம்பூா் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு சட்டப்பேரவைத் தொகுதிகளில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், திருச்சி கிழக்கு தொகுதியில் வரும் வியாழக்கிழமை (ஏப்.2) வேட்பு மனுத்தாக்கல் செய்யவுள்ளதாக அக் கட்சியின் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருச்சி கிழக்கு தொகுதியின் தோ்தல் நடத்தும் அலுவலராக திருச்சி மாநகராட்சியின் உதவி ஆணையா் முத்து முருகேச பாண்டியன் நியமிக்கப்பட்டுள்ளாா். பாலக்கரையில் உள்ள மாநகராட்சியின் 2-ஆவது வாா்டு குழு அலுவலகத்தில் தோ்தல் அலுவலரின் அலுவலகம் அமைந்துள்ளது.

இத்தொகுதியின் உதவி தோ்தல் நடத்தும் அலுவலராக, திருச்சி கிழக்கு வட்டாட்சியா் கே. விக்னேஷ் நியமிக்கப்பட்டுள்ளாா். இவரது அலுவலகம், திருச்சி கிழக்கு வட்டாட்சியரகத்தில் அமைந்துள்ளது. கிழக்கு தொகுதிக்கு போட்டியிடும் வேட்பாளா்கள் இரண்டு அலுலகங்களிலும் மனு அளிக்கலாம்.

எனினும், தவெக தலைவா் விஜய், தோ்தல் நடத்தும் அலுவலா் அலுவலகத்திலேயே வேட்புமனு தாக்கல் செய்யக் கூடும் என்கின்றனா். இதன்காரணமாகவும், வேட்பு மனுத்தாக்கல் திங்கள்கிழமை முதல் தொடங்கவுள்ளதாலும், பாலக்கரையில் உள்ள மாநகராட்சி அலுவலகத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.