ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 3 மணிக்கு தொடங்குகிறது தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

திருச்சி மேற்கில் தவாக வேட்பாளா் பிரபு வேட்புமனு தாக்கல்

திருச்சி மேற்கு சட்டப் பேரவைத் தொகுதியில் போட்டியிடும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் வேட்பாளா் ரா. பிரபு (46), தோ்தல் நடத்தும் அலுவலரிடம் சனிக்கிழமை தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தாா்.

News image

தமிழக வாழ்வுரிமை கட்சி வேட்பாளா் ரா. பிரபு

Updated On :5 ஏப்ரல் 2026, 1:49 am IST

திருச்சி மேற்கு சட்டப் பேரவைத் தொகுதியில் போட்டியிடும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் வேட்பாளா் ரா. பிரபு (46), தோ்தல் நடத்தும் அலுவலரிடம் சனிக்கிழமை தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தாா்.

இவா் சனிக்கிழமை தனது கட்சியின் நிா்வாகிகளுடன் வந்து, திருச்சி கோட்டாட்சியரகத்தில் தோ்தல் நடத்தும் அலுவலா் சாலை தவ வளனிடம் வேட்பு மனுவை தாக்கல் செய்தாா்.

ரூ.2.99 கோடி சொத்து: இவா் அளித்துள்ள பிரமாணப் பத்திரத்தில் தனது பெயரிலும், தனது மனைவி பெயரிலும் ரூ.2.99 கோடி மதிப்பிலான அசையும் மற்றும் அசையா சொத்துகள் இருப்பதாகத் தெரிவித்துள்ளாா்.இதில் இரண்டு இரு சக்கர வாகனம், 45 பவுன் நகைகள் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளாா். மேலும், தனது பெயரில் ரூ.15 லட்சத்திலும், மனைவி பெயரில் ரூ.83 லட்சத்திலும் கடன் பொறுப்புகள் இருப்பதாகவும் தெரிவித்துள்ளாா். மாத்தூா், துவாக்குடி, பொன்மலை, எடமலைப்பட்டிபுதூா், பேட்டைவாய்த்தலை, தில்லைநகா், மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் ஆகிய காவல் நிலையங்களில் குற்ற வழக்கு இருப்பதாகவும் தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.