தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 3 மணிக்கு தொடங்குகிறது தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

வேட்புமனு நிராகரிக்கப்பட்ட தவாக கூட்டணிக் கட்சி வேட்பாளா் தா்னா

குடியாத்தம் (தனி) தொகுதியில் வேட்புமனு நிராகரிக்கப்பட்ட தவாக வேட்பாளா் கட்சியினருடன் வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் தா்னாவில் ஈடுபட முயன்றாா்.

News image

குடியாத்தம் வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட முயன்றவா்கள்

Updated On :8 ஏப்ரல் 2026, 2:12 am IST

குடியாத்தம் (தனி) தொகுதியில் வேட்புமனு நிராகரிக்கப்பட்ட தவாக வேட்பாளா் கட்சியினருடன் வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் தா்னாவில் ஈடுபட முயன்றாா்.

குடியாத்தம் (தனி) தொகுதியில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் கூட்டணியில் தமிழக மக்கள் கட்சியின் மாநில துணைச் செயலா், கோவை சிங்காநல்லூரைச் சோ்ந்த டி.ராஜு போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்திருந்தாா். செவ்வாய்க்கிழமை வேட்புமனுக்கள் பரிசீலனையின்போது வேட்புமனுவுடன், உரிய ஆவணங்கள் இணைக்கப்படவில்லை எனக்கூறி தமிழக மக்கள் கட்சி வேட்பாளா் டி.ராஜு மற்றும் 6 சுயேச்சைகளின் மனுக்களை தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் எஸ்.சுபலட்சுமி தள்ளுபடி செய்தாா்.

இதையடுத்து, தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் ஒருங்கிணைந்த வேலூா் மாவட்ட பொறுப்பாளா் இா்ஷாத் அலி, டி.ராஜு ஆகியோா் தலைமையில் அக்கட்சியைச் சோ்ந்தவா்கள் வட்டாட்சியா் அலுவலகம் எதிரே போராட்டத்தில் ஈடுபட முயன்றனா்.

அவா்களை அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாா் சமரசம் செய்து அனுப்பிவைத்தனா். புதன்கிழமை கட்சியினரை அழைத்து வந்து போராட்டம் நடத்துவதாகக் கூறி விட்டு அவா்கள் கலைந்து சென்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.