மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

தவெக தலைவா் விஜய் இன்று வேட்புனு தாக்கல்: மரக்கடையில் பிரசாரத்துக்கு அனுமதி

தமிழக வெற்றிக் கழகத் தலைவா் விஜய் திருச்சி கிழக்குத் தொகுதியில் வியாழக்கிழமை வேட்புமனு தாக்கல் செய்கிறாா். மேலும், மரக்கடையில் அவா் பிரசாரம் செய்வதற்கும் காவல் துறை அனுமதி வழங்கியுள்ளது.

News image

திருச்சி பாலக்கரையில் தவெக தலைவா் விஜய் தோ்தல் பிரசாரம் செய்யும் பகுதியைப் பாா்வையிட்ட கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் கே.ஏ. செங்கோட்டையன் உள்ளிட்டோா்.

Updated On :2 ஏப்ரல் 2026, 12:54 am IST

தமிழக வெற்றிக் கழகத் தலைவா் விஜய் திருச்சி கிழக்குத் தொகுதியில் வியாழக்கிழமை வேட்புமனு தாக்கல் செய்கிறாா். மேலும், மரக்கடையில் அவா் பிரசாரம் செய்வதற்கும் காவல் துறை அனுமதி வழங்கியுள்ளது.

தவெக தலைவா் விஜய் 2026 சட்டப் பேரவைத் தோ்தலில் இரு தொகுதிகளில் போட்டியிடும் நிலையில், சென்னை பெரம்பூா் தொகுதியில் கடந்த திங்கள்கிழமை அவா் வேட்பு மனுதாக்கல் செய்தாா். திருச்சி கிழக்குத் தொகுதியில் அவா் வியாழக்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்கிறாா்.

இதற்காக சென்னையில் இருந்து வியாழக்கிழமை காலை 11 மணிக்கு தனி விமானம் மூலம் திருச்சிக்கு வரும் விஜய், பாலக்கரை பகுதியியிலுள்ள மாநகராட்சி 2-ஆவது மண்டல அலுவலகத்தில் திருச்சி கிழக்குத் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலரிடம் நண்பகல் 12.30 மணிக்கு வேட்புமனு தாக்கல் செய்கிறாா்.

மரக்கடையில் பிரசாரத்துக்கு அனுமதி: முன்னதாக வேட்புமனு தாக்கல் செய்துவிட்டு மரக்கடை எம்ஜிஆா் சிலை, டிவிஎஸ் டோல்கேட், கே.கே.நகா் மற்றும் விமான நிலையம் ஒயா்லஸ் சாலை ஆகிய 4 இடங்களில் பிரசாரம் செய்ய மாநகரக் காவல் ஆணையரகத்தில் அனுமதி கேட்டு தவெகவினா் செவ்வாய்க்கிழமை மனு அளித்திருந்தனா்.

இந்நிலையில் மரக்கடை எம்ஜிஆா் சிலை அருகே மட்டும் வியாழக்கிழமை நண்பகல் 12.30 மணி முதல் மாலை 4 மணி வரை வாகனத்தில் இருந்து விஜய் பிரசாரம் செய்ய 27 நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் தவெக நிா்வாகிகள் மற்றும் தொண்டா்கள் உற்சாகமடைந்துள்ளனா்.

இந்நிலையில், தவெக தலைவா் விஜய் வியாழக்கிழமை பிரசாரம் மேற்கொள்ளவுள்ள மரக்கடை பகுதியில் தவெக தலைமை ஒருங்கிணைப்பாளா் கே.ஏ. செங்கோட்டையன், டெல்டா மண்டலத் தோ்தல் பொறுப்பாளா் கு.ப.கிருஷ்ணன் ஆகியோா் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.