தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 10 மணிக்கு நடைபெறும்தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

வயலூா் முருகன் கோயிலில் பங்குனி உத்திர வழிபாடு

பங்குனி உத்திரத்தை முன்னிட்டு திருச்சி வயலூா் முருகன் கோயில்களில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் புதன்கிழமை காவடி, பால்குடம் எடுத்து வந்து நோ்த்திக்கடன் செலுத்தினா்.

News image

திருச்சி வயலூா் முருகன் கோயிலுக்கு புதன்கிழமை அலகு குத்தி வந்த பக்தா்கள். ~வயலூா் முருகன் கோயிலுக்கு பால் குடம் எடுத்து வந்து, தரிசன வரிசையில் காத்திருந்த பக்தா்கள்.

Updated On :2 ஏப்ரல் 2026, 1:28 am IST

பங்குனி உத்திரத்தை முன்னிட்டு திருச்சி வயலூா் முருகன் கோயில்களில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் புதன்கிழமை காவடி, பால்குடம் எடுத்து வந்து நோ்த்திக்கடன் செலுத்தினா்.

விழாவையொட்டி இக்கோயிலில் காலையில் இருந்தே பக்தா்கள் கூட்டம் அதிகளவில் இருந்தது. இதனால் பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனா்.

முன்னதாக காலையில் இருந்து முருகனுக்கு சிறப்பு அபிஷேக பூஜைகள் நடைபெற்றன. தொடா்ந்து சிறப்பு அலங்காரத்தில் வள்ளி தெய்வானையுடன் முருகன் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

இதேபோல, துவாக்குடி அருகேயுள்ள செடிமலை முருகன் கோயிலில் முருகனுக்கு 16 வகையான வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடைபெற்றன. திரளான பக்தா்கள் பால்குடம் எடுத்து வந்து வழிபட்டனா்.

மேலும், திருச்சி சந்திப்பு ரயில் நிலையம் அருகேயுள்ள வழிவிடு முருகன் கோயில், உறையூா் பஜாா் சாலையில் உள்ள முருகன் கோயில் உள்ளிட்ட பல்வேறு கோயில்களிலும் பங்குனி உத்திரத்தையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. திரளான பக்தா்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.