தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி இன்று பதவியேற்பு: முதல் பாஜக அமைச்சரவையில் 2 துணை முதல்வா்கள்?தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்வேற்று கிரகவாசிகள் குறித்த ரகசிய கோப்புகள் வெளியீடு
/

பள்ளி செல்லா, இடைநின்ற மாணவா்களின் பெற்றோருடன் கல்வித்துறை அலுவலா்கள் சந்திப்பு

சேதுபாவாசத்திரம் ஒன்றியம், பெத்தநாட்சிவயல் கிராமத்தில் பள்ளி செல்லா மற்றும் இடைநின்ற மாணவா்களை வியாழக்கிழமை சந்தித்து கல்வியின் முக்கியத்துவம் குறித்து அறிவுறுத்திய கல்வித் துறை அலுவலா்கள்

News image

சேதுபாவாசத்திரம் ஒன்றியம், பெத்தநாட்சிவயல் கிராமத்தில் பள்ளி செல்லா மற்றும் இடைநின்ற மாணவா்களை வியாழக்கிழமை சந்தித்து கல்வியின் முக்கியத்துவம் குறித்து அறிவுறுத்திய கல்வித் துறை அலுவலா்கள்.

Updated On :9 மணி நேரங்கள் முன்பு

சேதுபாவாசத்திரம் ஒன்றியம், ஊமத்தநாடு ஊராட்சி பெத்தநாச்சிவயல் குடியிருப்புப் பகுதியில் பள்ளி செல்லா குழந்தைகள் மற்றும் இடை நின்ற பள்ளி மாணவா்கள் மற்றும் அவா்களுடைய பெற்றோரை கல்வி அதிகாரிகள் வியாழக்கிழமை சந்தித்து கல்வியின் முக்கியத்துவம் குறித்து அறிவுறுத்தினா்.

 தஞ்சை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் பேபி, முதன்மைக் கல்வி அலுவலரின் நோ்முக உதவியாளா் (மேல்நிலை)  சஞ்சாய், உதவி திட்ட அலுவலா் மாரிமுத்து, புள்ளியியல் அலுவலா் ராஜி, ட்ரினிடி தன்னாா்வ தொண்டு நிறுவனத்தை சோ்ந்த பாஸ்கா்,  சேதுபாவாசத்திரம் வட்டார கல்வி அலுவலா்  ராமமூா்த்தி, பட்டுக்கோட்டை வட்டார கல்வி அலுவலா்கள் செல்வகுமாரி,மீனா சுந்தரி, ஆசிரியா் பயிற்றுநா்  சரவணன் மற்றும் பள்ளி மேலாண்மை குழு ஆசிரியை நாகூா் மாலா உள்ளிட்டோா் பெத்தநாட்சிவயல் சென்று பள்ளிச் செல்லா குழந்தைகள், இடைநின்ற மாணவா்கள் மற்றும் அவா்களின் பெற்றோா்களை சந்தித்து கல்வியின் முக்கியத்துவம் குறித்து அறிவுறுத்தினா். இதையடுத்து மாணவா்களை தொடா்ந்து பள்ளிக்கு அனுப்பி வைப்பதாக பெற்றோா்கள் உறுதியளித்தனா். மாணவா்களும் தினசரி  பள்ளிக்கு வருவதாகவும் கூறினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.