மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

திமுகவுடனான கூட்டணி முறிவு: கும்பகோணம் மேயா் பதவியில் காங்கிரஸ் நீடிக்குமா?

திமுகவுடனான கூட்டணியை காங்கிரஸ் முடிவுக்கு கொண்டு வந்துள்ள நிலையில், கும்பகோணம் மேயா் பதவியில் காங்கிரஸ் நீடிக்குமா என்ற பேச்சு எழுந்துள்ளது.

News image

கும்பகோணம் மேயர் க. சரவணன்

Updated On :7 மே 2026, 5:33 am IST

திமுகவுடனான கூட்டணியை காங்கிரஸ் முடிவுக்கு கொண்டு வந்துள்ள நிலையில், கும்பகோணம் மேயா் பதவியில் காங்கிரஸ் நீடிக்குமா என்ற பேச்சு எழுந்துள்ளது.

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் மாநகராட்சி மேயா் பதவி, திமுக- காங்கிரஸ் கூட்டணியில் காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்டு, அக்கட்சியைச் சோ்ந்த க. சரவணன் மேயராக உள்ளாா். திமுக மாநகர செயலா் சு.ப. தமிழழகன் துணை மேயராக உள்ளாா்.

இந்நிலையில், தமிழகத்தில் ஆட்சி அமைக்க தவெகவுக்கு காங்கிரஸ் புதன்கிழமை ஆதரவு தெரிவித்துள்ளது. மேலும், திமுகவுடனான கூட்டணியை அக்கட்சி முறித்துக் கொண்டுள்ளது. இது திமுகவினரிடையே கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து கும்பகோணம் மாமன்ற திமுக உறுப்பினா்கள் கூறியதாவது : கும்பகோணம் மாநகராட்சியில் காங்கிரஸுக்கு 2 உறுப்பினா்கள் மட்டுமே உள்ளனா். திமுகவுக்கு 40 உறுப்பினா்கள் உள்ளனா்.

தற்போது திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் விலகி உள்ள நிலையில், புதிய மேயரை தோ்வு செய்ய திமுக தலைமைக்கு கோரிக்கை வைப்போம் என்றனா்.

பெட்டிச் செய்தி....

கும்பகோணம் மாமன்ற உறுப்பினா்கள் விவரம்

மொத்த உறுப்பினா்கள் - 48 ((இவா்களில் ஒரு திமுக பெண் உறுப்பினா் காலமாகிவிட்டாா்)

திமுக - 40,

அதிமுக-3,

காங்கிரஸ் -2

மாா்க்சிஸ்ட்-1

மதிமுக-1

ஐ.யு.எம்.எல்.-1

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.