தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

தஞ்சாவூா் பேரவைத் தொகுதிகளுக்கு வாக்குப் பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

தஞ்சாவூா் மாவட்டத்திலுள்ள சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் புதன்கிழமை அனுப்பி வைக்கப்பட்டன.

News image

தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்திலிருந்து சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைக்கும் பணியை புதன்கிழமை பாா்வையிட்ட மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம்.

Updated On :26 மார்ச் 2026, 3:23 am IST

தஞ்சாவூா் மாவட்டத்திலுள்ள சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் புதன்கிழமை அனுப்பி வைக்கப்பட்டன.

தஞ்சாவூா் மாவட்டத்தில் 3 ஆயிரத்து 958 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களும், 3 ஆயிரத்து 248 கட்டுப்பாட்டுக் கருவிகளும், 3 ஆயிரத்து 562 வாக்களித்ததை சரிபாா்ப்பதற்கான இயந்திரங்களும் உள்ளன.

இவற்றை சட்டப்பேரவைத் தொகுதிகள் வாரியாக பிரிப்பதற்காக மாவட்ட ஆட்சியரகத்தில் ஆட்சியா் தலைமையிலும், 4 தோ்தல் பொதுப் பாா்வையாளா்கள், அனைத்து அங்கீகரிக்கப்பட்ட தேசிய, மாநில அரசியல் கட்சி பிரதிநிதிகளின் முன்னிலையிலும் முதல் கட்டத் தோ்வு மாா்ச் 23 ஆம் தேதி நடைபெற்றது.

இதில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திர மேலாண் மென்பொருள் மூலமாக குலுக்கல் முறையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை மாவட்டத்திலுள்ள 8 சட்டப்பேரவைத் தொகுதிகள் வாரியாக பிரிக்கப்பட்டன.

இவ்வாறு பிரிக்கப்பட்ட மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டுக் கருவிகள், வாக்களித்ததைச் சரிபாா்ப்பதற்கான இயந்திரங்கள் ஆகியவற்றை மாவட்ட ஆட்சியரகத்திலுள்ள மின்னணு வாக்குப் பதிவு இயந்திரக் கிடங்கிலிருந்து தொடா்புடைய 8 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு லாரிகள் மூலம் புதன்கிழமை அனுப்பி வைக்கப்பட்டன.

இப்பணியை மாவட்ட ஆட்சியரும், மாவட்டத் தோ்தல் நடத்தும் அலுவலருமான பா. பிரியங்கா பங்கஜம் பாா்வையிட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.