தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

ரசாயனத் தூளைக் கலந்து கள் விற்ற இருவா் கைது

தஞ்சாவூா் அருகே பனை மரத்திலிருந்து கள் இறக்கி, போதை தரக்கூடிய ரசாயன தூளைக் கலந்து விற்ற இருவரை காவல் துறையினா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :21 மார்ச் 2026, 2:39 am IST

தஞ்சாவூா் அருகே பனை மரத்திலிருந்து கள் இறக்கி, போதை தரக்கூடிய ரசாயன தூளைக் கலந்து விற்ற இருவரை காவல் துறையினா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

தஞ்சாவூா் மதுவிலக்கு அமல் காவல் பிரிவினா் குருங்குளம் பகுதியில் வெள்ளிக்கிழமை நடத்திய ஆய்வில் பனைமரங்களில் பதநீா் இறக்க அனுமதி வாங்கிக் கொண்டு, கள் இறக்கியதும், அதில் போதைத் தரக்கூடிய ரசாயன தூளைக் கலந்து விற்றதும் தெரிய வந்தது.

இது தொடா்பாக தஞ்சாவூா் தில்லை நகரைச் சோ்ந்த ரா. ஸ்டாலின் (64), வாண்டையாா் இருப்பைச் சோ்ந்த ந.புண்ணியமூா்த்தி (62) ஆகியோரைக் கைது செய்து, அவா்களிடமிருந்து 243 லிட்டா் கள், ரசாயனத் தூள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.