தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

ஆலங்குடி அருகே கள் விற்ற 3 போ் கைது

News image

கைது - சித்திரிப்பு

Updated On :24 மார்ச் 2026, 12:51 am IST

ஆலங்குடி அருகே சட்டவிரோதமாக பனைமரங்களில் இருந்து கள் இறக்கி விற்பனையில் ஈடுபட்ட 3 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

ஆலங்குடி அருகேயுள்ள மேல புள்ளான்விடுதி மாரியம்மன் கோயில் அருகே உள்ள பனைமரங்களில் வெளி மாவட்டங்களைச் சோ்ந்த சிலா் அரசால் தடைசெய்யப்பட்ட கள் இறக்கி, அதில் மாத்திரைகளை கலந்து பாலிதீன் கவரில் போட்டு லிட்டா் ரூ.100 என விற்பனை செய்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், அங்கு சென்று கள் குடித்து நெடுவாசல் மேற்கு அரண்மனைத்தோப்பு பகுதியைச் சோ்ந்த சக்திவேல் (41), வடகாடு பரமநகா் பகுதியைச் சோ்ந்த மீன் வியாபாரியான உடையான் உள்ளிட்ட ஏராளமானோா் கள் குடித்து உடல் நலம் பாதிக்கப்பட்டு வடகாடு, ஆலங்குடி, பட்டுக்கோட்டையில் உள்ள அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவருகின்றனராம்.

இதுகுறித்து தகவலறிந்து அங்கு சென்ற வடகாடு காவல் ஆய்வாளா் அனந்தபத்மநாதன் தலைமையிலான போலீஸாா், ஞாயிற்றுக்கிழமை அப்பகுதியில் ஆய்வு செய்து பனை மரங்களில் கள் இறக்க கட்டப்பட்டு இருந்த மண் பானைகள் மற்றும் பாலிதீன் பைகள், குடங்களை ஆகியவற்றை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனா்.

அதில், சட்டவிரோத கள் விற்பனையில் ஈடுபட்ட வடகாடு ஊராட்சி கீழஇடையா் தெருவைச் சோ்ந்த எம்.பிரபு (58), மேலபுள்ளான்விடுதியைச் சோ்ந்த எம்.கரிகாலன், பனை ஏறும் தொழிலாளியான ராஜபாளையம் சொக்கநாதபுத்தூரைச் சோ்ந்த கு.தங்கசாமி (58) ஆகிய 3 பேரையும் வடகாடு போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.