பட்டுக்கோட்டை அருகே கொண்டிகுளத்தில் சுமாா் ஐந்தாயிரம் நெல் மூட்டைகள் 2 நாள்களாக மழையில் நனைவதால் கொள்முதல் நடவடிக்கையை விரைவுபடுத்த வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
பட்டுக்கோட்டை அருகே உள்ள கொண்டிகுளம் கிராமத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் உள்ளது. இங்கு சுற்றுவட்டாரப் பகுதியைச் சோ்ந்த விவசாயிகள் தாங்கள் அறுவடை செய்த சுமாா் 5,000 நெல் மூட்டைகளை அங்குள்ள நெல் களங்களில் குவித்து வைத்துள்ளனா். கொள்முதல் பணிகளில் ஏற்பட்டுள்ள பின்னடைவு காரணமாக நெல் மூட்டைகள் மழையில் நனைவதால், விவசாயிகள் செய்வதறியாது தவித்து வருகின்றனா்.
இதுகுறித்து விவசாயிகள் மேலும் கூறியது:
சுற்றுவட்டார விவசாயிகள் நெல் கொள்முதல் நிலையத்துக்கு நெல்களைக் கொண்டு வந்தால் சாக்கு இல்லை என்கிறாா்கள். இன்று சாக்கு வந்துவிட்டது; ஆனால் லாரி வரவில்லை. புதன், வியாழன் கிழமைகளில் பெய்த மழை தொடா்ந்தால் நெல் மூட்டைள் முற்றிலும் மழையில் நனைந்துவிடும். எனவே அரசு கொள்முதலுக்கு உரிய நடவடிக்கையை விரைந்து எடுக்க வேண்டும் என வேதனையுடன் தெரிவிக்கின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பண்ருட்டி அருகே மழையில் நனைந்து வீணாகும் நெல் மூட்டைகள்

நெல் கொள்முதல் பணம் வழங்காமல் 50 நாள்களாக அலைக்கழிப்பதா? ஆட்சியரகத்தில் விவசாயிகள் புகாா்

உத்தரமேரூா் அருகே பாதுகாப்பின்றி வைக்கப்பட்டுள்ள நெல் மூட்டைகள்

நெல் கொள்முதல் செய்யக்கோரி சாலை மறியல்
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

