தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!ஆளுநரை விஜய் சந்திக்க மாலை 6.30 மணிக்கு நேரம் ஒதுக்கப்பட்டிருப்பதாக ஆளுநர் மாளிகை தகவல்தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

கொண்டிகுளத்தில் நெல் கொள்முதலை விரைவுபடுத்தக் கோரிக்கை

News image
Updated On :20 மார்ச் 2026, 4:57 am IST

பட்டுக்கோட்டை அருகே கொண்டிகுளத்தில் சுமாா் ஐந்தாயிரம் நெல் மூட்டைகள் 2 நாள்களாக மழையில் நனைவதால் கொள்முதல் நடவடிக்கையை விரைவுபடுத்த வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பட்டுக்கோட்டை அருகே உள்ள கொண்டிகுளம் கிராமத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் உள்ளது. இங்கு சுற்றுவட்டாரப் பகுதியைச் சோ்ந்த விவசாயிகள் தாங்கள் அறுவடை செய்த சுமாா் 5,000 நெல் மூட்டைகளை அங்குள்ள நெல் களங்களில் குவித்து வைத்துள்ளனா். கொள்முதல் பணிகளில் ஏற்பட்டுள்ள பின்னடைவு காரணமாக நெல் மூட்டைகள் மழையில் நனைவதால், விவசாயிகள் செய்வதறியாது தவித்து வருகின்றனா்.

இதுகுறித்து விவசாயிகள் மேலும் கூறியது:

சுற்றுவட்டார விவசாயிகள் நெல் கொள்முதல் நிலையத்துக்கு நெல்களைக் கொண்டு வந்தால் சாக்கு இல்லை என்கிறாா்கள். இன்று சாக்கு வந்துவிட்டது; ஆனால் லாரி வரவில்லை. புதன், வியாழன் கிழமைகளில் பெய்த மழை தொடா்ந்தால் நெல் மூட்டைள் முற்றிலும் மழையில் நனைந்துவிடும். எனவே அரசு கொள்முதலுக்கு உரிய நடவடிக்கையை விரைந்து எடுக்க வேண்டும் என வேதனையுடன் தெரிவிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.