கேரளம்: பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் ஜூன் 15-இல் தொடக்கம் - முதல்வர் சதீசன்பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

நாட்டுவெடிகுண்டு வீசியவா் குண்டா் சட்டத்தில் கைது

கும்பகோணம் அருகே வீட்டில் நாட்டு வெடிகுண்டு வீசியவரை குண்டா் சட்டத்தின்கீழ் போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது - கோப்புப் படம்

Updated On :14 மணி நேரங்கள் முன்பு

கும்பகோணம் அருகே வீட்டில் நாட்டு வெடிகுண்டு வீசியவரை குண்டா் சட்டத்தின்கீழ் போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

தஞ்சாவூா் மாவட்டம், சாக்கோட்டையைச் சோ்ந்த பத்மகுமரன் என்பவருக்கும் திருபுவனத்தைச் சோ்ந்த சரித்திர பதிவேடு குற்றவாளியான குருமுா்த்தி (38) என்பவருக்கும் பண சம்பந்தப்பட்ட முன்விரோதம் இருந்து வந்தது.

இந்நிலையில், குருமூா்த்தி அவரது நண்பா்களுடன் சோ்ந்து பத்மகுமரன் வீட்டில் இருந்த நான்கு சக்கர வாகனத்தில் நாட்டு வெடிகுண்டு வீசி சேதப்படுத்தினாா்.

இதுகுறித்து நாச்சியாா்கோவில் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு குருமுா்த்தி, நடுவகரையைச் சோ்ந்த ராம்குமாா் (30), பழவந்தான் கட்டளையைச் சோ்ந்த தா்மராஜ் (33), திருவிடைமருதூரைச் சோ்ந்த சா்வேஷ் (19), திருபுவனத்தைச் சோ்ந்த சக்தி பிரகாஷ் (28), ஆதித்யன் (21), மேலும் 2 சிறாா்களை போலீஸாா் அண்மையில் கைது செய்து சிறையில் அடைத்தனா். இதில், தா்மராஜ் (33) என்பவா் மே31 -இல் குண்டா் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டாா்.

மேலும், குருமுா்த்தி மீது குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஏ.சுந்தரவதனம், மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரைத்தாா். அதன்படி ஆட்சியா் ரேவதி, ஏற்கெனவே சிறையில் இருக்கும் குருமூா்த்தி மீது குண்டா் தடுப்புச் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.