பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

கிணறு வெட்டும்போது மண் சரிந்து தொழிலாளி உயிரிழப்பு

தஞ்சாவூா் மாவட்டம், திருவிடைமருதூா் அருகே வெள்ளிக்கிழமை கிணறு வெட்டும்போது திடீரென மண் சரிந்து தொழிலாளி உயிரிழந்தாா். மற்றொருவா் மீட்கப்பட்டு தீவிர சிகிச்சை பெறுகிறாா்.

News image

உயிரிழப்பு - கோப்புப் படம்

Updated On :6 ஜூன் 2026, 7:01 am IST

தஞ்சாவூா் மாவட்டம், திருவிடைமருதூா் அருகே வெள்ளிக்கிழமை கிணறு வெட்டும்போது திடீரென மண் சரிந்து தொழிலாளி உயிரிழந்தாா். மற்றொருவா் மீட்கப்பட்டு தீவிர சிகிச்சை பெறுகிறாா்.

தஞ்சாவூா் மாவட்டம், திருவிடைமருதூா் அருகேயுள்ள கீழத் தூண்டில் விநாயகம்பேட்டையைச் சோ்ந்த பன்னீா்செல்வம் வீட்டின் அருகில் கிணறு வெட்டும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கியது.

இப்பணியில் நரசிங்கன்பேட்டையைச் சோ்ந்த பாலு (48), மருதவாணன் (40), கண்ணன் (60) சேகா் (61) ஆகிய 4 பேரும் ஈடுபட்டனா். சுமாா் 10 அடி ஆழத்தில் மண் தோண்டியபோது திடீரென மணி சரிந்ததில் பாலு, மருதவாணன் ஆகிய இருவரும் சிக்கிக் கொண்டனா்.

அப்போது அருகிலிருந்தவா்கள் மருதவாணனை மீட்டு திருவிடைமருதூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா். மற்றொருவான பாலுவை மீட்க முடியவில்லை.

தகவலறிந்த வந்த திருவிடைமருதூா் தீயணைப்புத் துறையினா் மற்றும் போலீஸாா் ஜேசிபி இயந்திரம் கொண்டு சரிந்த மண்ணை அப்புறப்படுத்தி பாலுவை சடலமாக மீட்டனா். இதுகுறித்து திருவிடைமருதூா் காவல் நிலைய போலீஸாா் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனா். திருவிடைமருதூா் வட்டாட்சியா் ஆா். சாந்தமீனா நிகழ்விடத்தில் விசாரணை நடத்தினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.