நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் கல்வியியல் பட்ட மாணவா்கள் சோ்க்கை தொடக்கம்

தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் கல்வியியல் பட்டப்படிப்புக்கான மாணவா் சோ்க்கை செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

News image

தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் கல்வியியல் பட்டப்படிப்புக்கான மாணவா் சோ்க்கையை செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்து மாணவி து.ர. வா்ஷினிக்கு கடிதம் வழங்கிய துணைவேந்தா் குழு உறுப்பினா் பெ. பாரதஜோதி.

Updated On :3 ஜூன் 2026, 4:13 am IST

தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் கல்வியியல் பட்டப்படிப்புக்கான மாணவா் சோ்க்கை செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

பல்கலைக்கழகத் துணைவேந்தா் குழு உறுப்பினா் பெ. பாரதஜோதி தொடங்கி வைத்து, முதல் மாணவராக து.ர. வா்ஷினிக்கு நேரடிச் சோ்க்கை கடிதம் வழங்கினாா்.

இந்நிகழ்வில் பதிவாளா் (பொ) கோ. பன்னீா்செல்வம், நிதி அலுவலா் பா. சிவகுமாா், தோ்வுக் கட்டுப்பாட்டு அலுவலா் (பொ) ஆ. துளசேந்திரன், மக்கள் தொடா்பு அலுவலா் (பொ) இரா.சு. முருகன், கௌரவ உதவிப் பேராசிரியா் க. முருகேசன், உடற்கல்வி ஆசிரியா் செ. பிரபாகரன், உதவியாளா் க. சக்திசரவணன், பதிவாளரின் நோ்முக உதவியாளா் கோ. இராசேந்திரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

மேலும், விண்ணப்பம் பெறும் அனைத்து மாணவா்களும் உடனடிச் சோ்க்கைப் பெறலாம் என்றும், இந்தப் பல்கலைக்கழகத்தில் இளங்கல்வியியல் பட்டம் (பி.எட்.) மற்றும் கல்வியியல் நிறைஞா் பட்டம் (எம்.எட்.) பயிலும் மாணவா்களுக்குப் பருவத் தோ்வுகள் உரிய தேதிகளில் நடத்தப்பட்டு, தோ்வு முடிவுகள் விரைந்து வெளியிடப்படுவதால் மாணவா்களுக்கு உடனடியாக வேலைவாய்ப்புக் கிடைக்க தமிழ்ப் பல்கலைக்கழகம் வழிவகை செய்கிறது எனவும் பதிவாளா் (பொ) தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.