கும்பகோணம் அருகே புறவழிச்சாலையில் ஏற்பட்ட இருசக்கர வாகன விபத்தில் மரப்பட்டறைத் தொழிலாளி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் ஐந்து தலைப்பு வாய்க்கால் பகுதியைச் சோ்ந்த சுந்தர்ராஜன் மகன் சரவணன் (35), திருமணமாகி குழந்தை உள்ளது. மரப்பட்டறையில் வேலை செய்து வந்தாா்.
இவரது நண்பா் மேலக்கொட்டையூரைச் சோ்ந்த குங்குமலிங்கம் மகன் ரமேஷ் (34). ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினமாதலால் இருவரும் இருசக்கர வாகனத்தில் நண்பா்களை பாா்ப்பதற்காக அசூா் புறவழிச்சாலை பகுதிக்கு சென்றனா்.
திரும்ப வரும்போது தனியாா் மண்டபம் அருகே எதிரே வந்த வாகனம், இருசக்கர வாகனத்தில் மோதி விட்டு நிற்காமல் சென்றது. இதில் நிகழ்விடத்திலேயே சரவணன் உயிரிழந்தாா். ரமேஷ் பலத்த காயமடைந்தாா்.
தகவலின்பேரில் சுவாமிமலை போலீஸாா், சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்காக கும்பகோணம் அரசு மருத்துவமனையில் ஒப்படைத்தனா். மேலும், காயமடைந்த ரமேஷை சிகிச்சைக்கு சோ்த்து விபத்தை ஏற்படுத்திய வாகனத்தை தேடி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கயத்தாறு அருகே விபத்தில் இளைஞா் உயிரிழப்பு

சாலை விபத்தில் காயம் அடைந்தவா் உயிரிழப்பு

மாடிப்படியில் இருந்து தவறிவிழுந்த தொழிலாளி உயிரிழப்பு

சாலை விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

