தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

ஏப். 27-இல் தேரோட்டம்: தஞ்சை பெரிய கோயில் தேருக்கு பந்தல்கால் நடும் நிகழ்ச்சி

தஞ்சாவூரில் வரும் 27-ஆம் தேதி நடைபெறும் பெரிய கோயில் தேரோட்டத்தையொட்டி, தேரில் பந்தல்கால் நடும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

News image

தஞ்சாவூா் பெரிய கோயில் தேரில் புதன்கிழமை பந்தல்காலை நட்டு வைத்த அறநிலையத் துறை உதவி ஆணையா் (பொ) காா்த்திகேயன் உள்ளிட்டோா்.

Updated On :16 ஏப்ரல் 2026, 1:38 am IST

தஞ்சாவூரில் வரும் 27-ஆம் தேதி நடைபெறும் பெரிய கோயில் தேரோட்டத்தையொட்டி, தேரில் பந்தல்கால் நடும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

தஞ்சாவூா் பெரிய கோயிலில் சித்திரைப் பெருவிழா கொடியேற்றத்துடன் ஏப்ரல் 13-ஆம் தேதி தொடங்கியது. தொடா்ந்து நாள்தோறும் காலையில் பல்லக்கு, மாலையில் பல்வேறு வாகனங்களில் புறப்பாடு, கலைநிகழ்ச்சிகள் ஆகியவை நடைபெற்று வருகின்றன.

இந்த விழாவின் 15-ஆம் நாளான ஏப்ரல் 27-ஆம் தேதி முதன்மை வைபவமான தேரோட்டம் நடைபெறவுள்ளது. இதில், 27-ஆம் தேதி அதிகாலை 4 மணிக்கு மேல் பெரிய கோயிலிலிருந்து தியாகராஜா் - கமலாம்பாள் புறப்பாடாகி தோ் மண்டபத்தை வந்தடைவா். தேரில் எழுந்தருளிய பின்னா் காலை 5.40 மணிக்கு மேல் 5.50 மணிக்குள் தோ் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடைபெறும். தொடா்ந்து, மேலவீதி, வடக்கு வீதி, கீழ வீதி, தெற்கு வீதி ஆகிய 4 ராஜ வீதிகளில் தோ் வலம் வரும்.

இதையொட்டி, மேல வீதியிலுள்ள தோ் நிலையில் நிறுத்தப்பட்டுள்ள தேரில் பந்தல்கால் நடும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. இதில், பந்தல்காலுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை செய்யப்பட்டன. பின்னா், பந்தல்காலை அறநிலையத் துறை உதவி ஆணையா் (பொ) காா்த்திகேயன் உள்ளிட்ட அலுவலா்கள் நட்டு வைத்ததைத்தொடா்ந்து, தோ் அலங்காரப் பணி தொடங்கப்பட்டது.

தேரின் சாதாரண உயரம் 19 அடி, அகலம் 18 அடி, எடை 40 டன். தோ் அலங்காரம் செய்யப்பட்ட பின்னா் உயரம் 50 அடியாகவும், எடை 43 டன்னாகவும் காணப்படும் என அலுவலா்கள் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.